திருச்சிராப்பள்ளி, ஆக.20- அகில இந்திய விவசாயத் தொழிலா ளர் சங்க பஞ்சப்பூர் கிளை சார்பில் திங்களன்று பஞ்சப்பூரில் வெண்மணி தியாகிகள் 50-ம் ஆண்டு நினைவு நாள் கல்வெட்டு திறப்பு விழா, கொடி யேற்று விழா மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. விழாவிற்கு மாவட்டத் துணைத்தலைவர் தங்கராஜ் தலைமை வகித்தார். தியாகிகள் நினைவு கல் வெட்டை மாநில பொருளாளர் சங்கர் திறந்து வைத்தார். சங்கக் கொடியை மாநில செயலாளர் பழநிசாமி ஏற்றி னார். பின்னர் நடைபெற்ற பொதுக்கூட் டத்தில் மாநிலப் பொருளாளர் சங்கர், மாநிலச் செயலாளர் பழநிசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் கே.சி.பாண்டியன், வெற்றிச்செல்வன், மாவட்ட தலைவர் செல்வராஜ், செய லாளர் தங்கதுரை, சிபிஎம் அபிஷேக புரம் பகுதி செயலாளர் வேலுசாமி, மாதர் சங்க மாவட்ட செயலாளர் சரஸ்வதி, கட்டுமான சங்க மாவட்ட துணைத்தலைவர் கல்யாணி, துணை செயலாளர் பழனிசாமி ஆகியோர் தோழர் தனுஷ்கோடி களப்பணிகளை நினைவு கூர்ந்தும். பஞ்சப்பூர் பகுதியில் அரசு புறம் போக்கில் குடியிருக்கும் அனை வருக்கும் குடிமனை பட்டா வழங்க வேண்டும். இப்பகுதி மக்களுக்கு நிரந்த ரமான சுடுகாடு, மயான எரிமேடை மற்றும் காத்திருப்போர் கூடம், சாலை வசதி, மின்விளக்கு அமைத்து கொடுக்க வேண்டும் என இப்பகுதி மக்களின் அடிப்படை தேவைகளை வலியுறுத்தி யும் சிறப்புரையாற்றினர். நிகழ்ச்சியில் மூக்கையா, இளையராஜா, முத்துக் குமார், கணேசன், கோபால், அரசாயி, அஞ்சலை, குருநாதன் உள்பட ஏராள மானோர் கலந்து கொண்டனர்.