tamilnadu

சங்க வாலிபர் கிளை துவக்க விழா

திருச்சிராப்பள்ளி: திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் இனாம்புதூர் ஊராட்சியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் புதிய கிளை துவக்க விழா நடைபெற்றது. புறநகர் மாவட்டத் தலைவர் பாலு தலைமை வகித்தார்.  முன்னாள் செயலாளர் திருநாவுக்கரசு சிறப்புரையாற்றினார். புதிய கிளை தலைவராக ஜீவா, செயலாளராக மனோக ரன், பொருளாளராக கோபி, துணைத் தலைவராக பெரியண்ணன், துணைச் செயலாளராக பாலு ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

;