tamilnadu

img

மாதர் சங்க கிளை துவக்க விழா

 திருச்சிராப்பள்ளி, செப்.8- அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் புதிய கிளை துவக்க விழா திருச்சி மாவட்டம் முசிறி தாலுகா வீரமணிபட்டி கிராமத்தில் வெள்ளியன்று நடைபெற்றது. விழாவிற்கு புற நகர் மாவட்ட செயலாளர் மல்லிகா தலைமை வகித்தார். புதிய கிளையின் தலைவராக ஆர்.ரெங்கம்மாள், செயலாளராக சரோஜா, பொருளாளராக எஸ்.சின்னப்பொண்ணு உள்பட 10 பேர் கொண்ட நிர்வாகக்குழு தேர்வு செய்யப்பட்டது. இப்பகுதியில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் ரூ 10 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை உடனே மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்து வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கிளை பொருளாளர் சின்னப்பொண்ணு நன்றி கூறினார்.

;