புதுக்கோட்டை, மே 17-அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் தியாகி சண்முகம் மற்றும் வெண்மணி தியாகிகளின் நினைவாக தியாகிகளின் படத்திறப்பு, கொடியேற்று விழா, கல்வெட்டுத் திறப்பு மற்றும் அரசியல் விளக்கப் பொதுக்கூட்டம் புதுக்கோட்டையை அடுத்த நமணசமுத்திரத்தில் வியாழக்கிழமையன்று நடைபெற்றது.நமணசமுத்திரம் தியாகி சண்முகம் நினைவுத்திடலில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு விதொச ஒன்றியச் செயலாளர் கே.அடைக்கன் தலைமை வகித்தார். மூத்த நிர்வாகி ஏ.பி.ஆறுமுகம் வரவேற்றார். விச ஒன்றியச் செயலாளர் எம்.அடைக்கப்பன், விதொச ஒன்றியத் தலைவர் பி.ஆவுடைமுத்து, ஜனநாயக மாதர் சங்க ஒன்றியத் தலைவர் ஆர்.மீனா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தியாகிகளின் நினைவாக செங்கொடியை ஏற்றி வைத்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவர் உ.வாசுகி அரசியல் விளக்கவுரையாற்றினார். தியாகிகள் நினைவு கல்வெட்டைத் திறந்து வைத்து விதொச மாநிலப் பொருளாளர் எஸ்.சங்கர், நமுணை பஞ்சாலைப் போராட்ட நாயகர் தோழர் ஆர்.உமாநாத் படத்தை திறந்து வைத்து விதொச மாநிலச் செயலாளர் ஏ.பழனிச்சாமி ஆகியோர் உரையாற்றினர். விவசாய இயக்கத்தின் முன்னணித் தலைவர் தோழர் கோ.வீரையன் படத்தை விதொச மாவட்டத் தலைவர் அ.பாலசுப்பிரமணியன், நமுணை தியாகி சண்முகம் படத்தை விதொச மாவட்ட துணைத் தலைவர் எம்.சண்முகம், தோழர் கே.ஆர்.சின்னையா படத்தை வி.ச மாநில துணைச் செயலாளர் எஸ்.பொன்னுச்சாமி, தோழர் ஆண்டியப்பன் படத்தை விதொச மாவட்டப் பொருளாளர் கே.சண்முகம், தோழர் பிச்சையம்மாள் படத்தை சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் எம்.ஜியாவுதீன், தோழர் எஸ்.ரெங்கையா படத்தை ஜனநாயக மாதர் சங்க மாவட்டச் செயலாளர் டி.சலோமி, தோழர் பொன்னவயல் கருப்பையா படத்தை விதொச மாவட்டக்குழு உறுப்பினர் கே.வெள்ளைச்சாமி, தோழர் பெரியகருப்பன் படத்தை விச ஒன்றிய அமைப்பாளர் எம்.வீரமணி, தோழர் சிகப்பாயி படத்தை விதொச மாவட்ட துணைச் செயலாளர் பி.மருதப்பா ஆகியோர் திறந்து வைத்தனர். நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் சி.அன்புமணவாளன், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் ஜி.நாகராஜன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். முன்னதாக தியாகி சண்முகம் நினைவிடத்தில் உ.வாசுகி உள்ளிட்ட தலைவர்கள் மாலை வைத்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் ஆலங்குடி விழுதுகள் குழுவினரின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது.