திருச்சிராப்பள்ளி, ஜூன் 3-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்ரீரங்கம் பகுதி இடைக்கமிட்டி உறுப்பினர் தோழர் நந்தகுமார் தாயார் பி.முத்தம்மாள் உடல் நலக்குறைவால் திங்களன்று மதியம்இயற்கை எய்தினார்.அவரது உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்மத்திய கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினர் எஸ்.ஸ்ரீதர், மாநகர்மாவட்டசெயலாளர் ஆர்.ராஜா, ஸ்ரீரங்கம் பகுதி செயலாளர் வேளாங்கண்ணி மற்றும் கட்சியினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.அன்னாரது இறுதி ஊர்வலம் இன்று(செவ்வாய் கிழமை) மதியம் ஸ்ரீரங்கம் மேலூர் ரோடு செட்டியார் தோப்பில் உள்ளஅவரது இல்லத்தில் இருந்து புறப்படும்.