tamilnadu

img

புதிய கல்விக் கொள்கை கருத்தரங்கு

நாகப்பட்டினம், ஆக.26- புதிய கல்விக் கொள்கையைத் திரும்பப் பெற வலியுறுத்தி நாகை மாவட்டம் கீழையூரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கீழயூர், தலை ஞாயிறு,வேதாரணியம் ஒன்றியக் குழுக்கள் சார்பில், ஞாயிற்றுக்கிழமை கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கத்திற்கு, சங்கத்தின் கீழையூர் ஒன்றியச் செயலாளர் பி.விஜயேந்திரன் தலைமை வகித்தார். மாவட்டக் குழு உறுப்பினர்கள் ஏ.ராஜா, வி.முருகானந்தம், டி.பாரதி, ஜே.மேனகா, கண்மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைஞாயிறு ஒன்றியச் செயலாளர் டி.அருள்தாஸ் வரவேற்றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரும்  சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான வி.மாரிமுத்து, கருத்தரங்கத்தைத் துவக்கி வைத்து விளக்கவுரையாற்றினார். வாலிபர் சங்க மாநிலத் துணைச் செயலாளர் சி.பாலச்சந்திரபோஸ் சிறப்புரையாற்றினார். இலக்கை நோக்கி எனும் பொருளில்  மாவட்டப் பொருளாளர் டி.வெங்கட்ராமன், டி.தமிழ்மாறன், கே.கோபிநாத், கே.புகழேந்தி, டி.பி.எஸ்.ராஜா, எஸ்.அன்புராஜ், எஸ்.ரமேஷ், டி.ரவிச்சந்திரன், எஸ்.மல்கோத்ரா, வி.நெல்சன்மண்டேலா, பி.மஞ்சு ஆகியோர் உரையாற்றினர். வாலிபர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஏ.வி.சிங்காரவேலன் நிறைவுரையாற்றினார். யு.ஜோதிபாஸ் நன்றி கூறினார்.