tamilnadu

புதிய கிளை துவக்க விழா

திருச்சிராப்பள்ளி ,ஜூன் 23 திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் அயன்ரெட்டியபட்டியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் புதிய கிளை துவக்க விழா திங்களன்று நடைபெற்றது.  விழாவிற்கு வாலிபர் சங்கத்தின் புறநகர் மாவட்ட தலைவர் பாலு தலைமை வகித்தார். வாலிபர் சங்க  மாவட்ட முன்னாள் துணைச் செயலாளர் கண்ணன், வாலிபர் சங்க முன்னாள் தலைவர் வெள்ளைச்சாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.  புதிய கிளையின் தலைவராக கார்த்தி, செயலாளராக பாலமுருகன், பொருளாளராக சுந்தரவடிவேல், துணை தலைவர்களாக குணசீலன். வேல்முருகன். துணை செயலாளர்களாக பவித்ரன், தினேஷ்; ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

;