tamilnadu

img

தோ.செல்லாண்டிபாளையம் அரசுப் பள்ளிக்கு தேசிய விருது

குடவாசல், செப்.20- குடவாசல் அரசு கலைக் கல்லூரிக்கு புதிய கட்டிடம் அமைத்து தர வேண்டி இரண்டாம் நாளும் வகுப்புக்கு செல்லாமல் கல்லூரி மாணவ மாணவிகள் போராட்டம் நடத்தினர்.  திருவாரூர் மாவட்டம் குடவாசலில் அரசு கலை அறிவியல் கல்லூரி கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை 27 ஆம் தேதி எம்ஜிஆர் கலை அறிவியல் கல்வி என்ற பெயரில் தற்காலிகமாக குடவாசல் ஓகையில் அமைந்துள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள கட்டிடத்தில் 5 வகுப்பறைகளை கொண்டு அரசால் புதிய கல்லூரி தொடங்கப்பட்டது. கடந்த மூன்று வருடமாக குடவாசல் சுற்று வட்டார பகுதியில் கல்லூரிக்கான இடம் தேர்வு செய்வதில் போதிய கவனம்யின்றி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் செயல்படுவதால் இன்று வரையில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தற்காலிகமாக கொடுத்த இடத்தில் தான் கல்லூரி செயல்படுகிறது. துவக்கத்தில் மாணவர் சேர்க்கை 250-ல் இருந்து 300 வரை இருந்தது. தற்போது சுமார் 800 மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். இடப் பற்றாக்குறையால் மாணவ மாணவிகள் முழுமையாக கல்வி பயில முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இதைதொடர்ந்து மாணவர்கள் மன உளைச்சல் இன்றி கல்வி கற்க புதிய கல்லூரி கட்டிடம் அமைத்துத் தர உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்லூரிக்கு அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வியாழன் அன்று கல்லூரி புறக்கணிப்பு செய்தனர். தொடர்ந்து வெள்ளிக்கிழமை மாணவ, மாணவிகள் கல்லூரி புறக்கணித்து குடவாசல் வட்டாட்சியர் நேரில் வந்து கல்லூரி பார்வையிட வேண்டும் என்ற ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதையடுத்து அங்கு வந்த குடவாசல் தாசில்தார் ஜீவானந்தம்,  மாணவர் கோரிக்கையை ஆட்சியரிடம் கொண்டு செல்கிறோம். தற்போது போராட்டத்தை கைவிட்டு கல்லூரிக்கு செல்லுமாறு கேட்டுக் கொண்டார். இதைதொடர்ந்து மாணவ- மாணவிகள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர்.