டாஸ்மாக் கடைகளுக்கு மே 23 ல்விடுமுறை
நாகர்கோவில் , மே 14 -வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, டாஸ்மாக் கடைகளுக்கு வியாழக்கிழமை (மே 23) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தல் கடந்த ஏப். 18 ஆம் தேதிநடைபெற்றது. இதைத் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ளஅனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகள் மற்றும் மதுபானக் கூடங்களும் மே 23 ஆம் தேதி காலை 10 மணிமுதல் இரவு 12 மணிவரை செயல்படதடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.மேற்கண்டவாறு கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லாரிகளில் டயர்,பேட்டரி திருட்டு: 2 பேர் கைது
தூத்துக்குடி, மே 14 -கோவில்பட்டி அருகே பைபாஸ் ரோட்டில் நிறுத்தியிருந்த லாரிகளில் பேட்டரி, டயர்களை திருடிய 2பேரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி - மதுரை பைபாஸ் ரோட்டில் லாரிகள் நிறுத்துமிடத்தில் லாரிகளில்இருந்து டயர்கள், பேட்டரி மற்றும் உதிரிபாகங்கள் அடிக்கடிதிருடுபோனது. இதையடுத்து திருட்டில் ஈடுபடும் மர்மநபர்களை பிடிக்க டிரைவர்கள், கிளீனர்கள் திட்டமிட்டனர். இந்நிலையில், திங்கள் இரவு அங்கு நிறுத்தியிருந்த லாரியில் மர்ம நபர்கள் இருவர் 3 டயர்களை கழற்றினர்.மேலும், மற்றொரு லாரியில் பேட்டரியை திருடியுள்ளனர். இதையடுத்து அங்கு மறைந்து நின்ற டிரைவர்களும், கிளீனர்களும் சேர்ந்து அவர்களை இருவரையும் கையும்களவுமாகப் பிடித்தனர்.பின்னர் அவர்கள் இருவரையும் கோவில்பட்டி மேற்குகாவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது தொடர்பாககோவில்பட்டியைச் சேர்ந்த லாரி டிரைவர் கிருஷ்ணமூர்த்தி மகன் சந்தனமாரிமுத்து (40) என்பவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் அவர்கள் 2பேரையும் கைதுசெய்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் தூத்துக்குடி சிவந்தாகுளம் ரோட்டைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் மகன் அஜித்குமார் (24), பிரையன்ட் நகரைச் சேர்ந்தஜெயம் மகன் அகஸ்டின்ராஜ் (29) என்பதும், லாரியில் டயர் மற்றும் பேட்டரிகளை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்து 10 டயர்கள், 5 பேட்டரிகள் மற்றும் தார்ப்பாய்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
முன்விரோதத்தில் கத்திக்குத்து
நாகர்கோவில், மே 14-குமரி மாவட்டம், புத்தன்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் ரவிக்குமார் (47). அரசு பேருந்து ஓட்டுநர்.அதே பகுதியைச் சேர்ந்தவர்கள் சதீஷ் (28), ஜெயக்குமார் (22). இவர்களுக்கு இடையே ஏற்கனவே முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில், திங்களன்று இரவு ரவிக்குமார், புத்தன்குடியிருப்பு பகுதியில் வந்து கொண்டிருந்தார். அப்போது சதீஷ், ஜெயக்குமார் ஆகிய இருவரும் வழிமறித்து, ரவிக்குமாரிடம் தகராறுசெய்தனர். தகராறு முற்றியதும், ஆத்திரத்தில் ரவிக்குமாரை கத்தியால் குத்திவிட்டு வாலிபர்கள் தப்பியோடினர். படுகாயம் அடைந்து சாலையில் மயங்கிக் கிடந்த ரவிக்குமாரை அப்பகுதி மக்கள் மீட்டு, தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த கோட்டாறு காவல்துறையினர் விசாரணை நடத்தி, சதீஷ், ஜெயக்குமார் மீது வழக்கு பதிவு செய்து தலைமறைவான இருவரையும் தேடிவருகின்றனர்.
காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு பட்டதாரி பெண் தற்கொலை
நாகர்கோவில், மே 14-புதுக்கடையை அடுத்த ராமன்துறை பகுதியை சேர்ந்தவர் டென்சன். இவரது மகள் டெர்பின் ( 23). பட்டதாரியான இவர் அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இவரது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். சம்பவத்தன்று டென்சன் வேலைக்கு சென்றிருந்தார். வீட்டில் டெர்பின் மட்டும் தனியாக இருந்துள்ளார்.டென்சன் வீடு திரும்பியபோது டெர்பின் அறை கதவு சாத்தப்பட்டு இருந்தது. கதவை தட்டிப்பார்த்தனர். நீண்டநேரம் ஆகியும் கதவு திறக்கப்படவில்லை. இதையடுத்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அறையில்மின் விசிறியில் டெர்பின் தூக்கில் தொங்கினார். பதறிப்போன உறவினர்கள் அவரை மீட்டு அருகில் உள்ளஒரு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சைபலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.இதுகுறித்து புதுக்கடை காவல் நிலையத்தில் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாக்கு எண்ணும் மையத்தில் கைபேசிக்கு அனுமதியில்லை
திண்டுக்கல், மே 14-வாக்கு எண்ணிக்கை நாளன்று வாக்குஎண்ணிக்கை மையத்திற்குள் கைபேசிகள் எடுத்துச் செல்ல அனுமதியில்லை என்று திண்டுக்கல் மாவட்ட தேர்தல்அதிகாரி டாக்டர்வினய் தெரிவித்துள்ளார். திங்களன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தையொட்டி அவர் கூறியதாவது: திண்டுக்கல் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மே 23-ஆம்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு துணை ராணுவத்தினர் மற்றும்காவல்துறையினர் ஆகியோர்களைக் கொண்டு தொடர்ந்து கண்காணிப்பட்டு வருகிறது. வாக்கு எண்ணிக்கை நாளன்று மையத்திற்கு கைபேசி கொண்டுவர அனுமதி இல்லை. வாக்குகள் எண்ணும் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ள அலுவலர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் ஆகியோர் கைபேசியை எடுத்துவர வேண்டாம். இவ்வாறு ஆட்சியர் கூறினார்.