tamilnadu

img

தீண்டாமை ஒழிப்பு முன்னணி நாகை மாவட்ட மாநாடு

நாகப்பட்டினம், ஜூலை 8- தமிழ்நாடு தீண்டமை ஒழிப்பு முன்னணியின் நாகை மாவட்ட 3-வது மாநாடு திங்கட்கிழமை வைதீஸ்வரன்கோயில் பழனி யம்மாள் திருமண மகாலில் நடை பெற்றது. மாநாட்டுக்கு மாவட்டத் தலைவர் டி.சிம்சன் தலைமை வகித்தார். வரவேற்புக்குழுச் செய லாளர் சி.வி.ஆர்.ஜீவானந்தம் வர வேற்புரையாற்றினார்.  மாவட்டச் செயலாளரும் சட்ட மன்ற முன்னாள் உறுப்பினருமான நாகைமாலி வேலை அறிக்கை முன் வைத்தார். சி.ஐ.டி.யு.மாவட்டத் துணைத் தலைவரும் சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான வி. மாரிமுத்து சிறப்புரையாற்றினார். சிஐடியு மாவட்டச் செயலாளர் சீனி.மணி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.துரைராஜ், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.வி.சிங்காரவேலன் த.மு.எ.க.ச. மாவட்டச் செயலாளர் ப.பாலசுந்தரம், சி.மேகநாதன், கே.பி.மார்க்ஸ், எஸ்.எல்.ஸ்ரீதர்,  கே.என்.ஸ்டாலின், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.  தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலப் பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ் நிறைவுரையாற்றினார். 29 பேர் மாவட்டக் குழுவினராகத் தேர்வு செய்யப்பட்டனர். புதிய மாவட்டத் தலைவராக சி.வி.ஆர்.ஜீவானந்தம், செயலாள ராக வழக்கறிஞர் ப.சுபாஷ்சந்திர போஸ், துணைத் தலைவர்களாக டி.சிம்சன், கே.சித்தார்த்தன், மா. முத்துராமலிங்கம், துணைச் செய லாளர்களாக வி.வி.ராஜா, கவிஞர் ஆ.மீ.ஜவகர், சீனி.மணி, பொருளா ளராக பி.ஏ.ஜி.சந்திரசேகரன் ஆகி யோர் தேர்வு செய்யப்பட்டனர். சீர்காழி ஒன்றியச் செயலாளர் வி.எஸ்.தமிழ்வேந்தன் நன்றி கூறி னார்.