சீர்காழி, ஜூன் 17- நாகை மாவட்டம் கொள்ளிடம் அரசு மேல்நிலைப்பள்ளியில் கொள்ளிடம் ரோட்டரி சங்கம் சார்பில் 28 தனியார் நிறுவனங்களில் வேலை நியமனத்திற்கான நேர்முக தேர்வு முகாம் நடைபெற்றது. முகாமில் 8-ஆம் வகுப்பு முதல் டிகிரி படித்தவர்கள் மற்றும் பொறி யியல் பட்ட மற்றும் பட்டய வகுப்பு படித்த 855 பேர் கலந்து கொண்ட னர். இதில் தேர்வு செய்யப்பட்ட அனைவரும் ஒரு வாரத்திற்குள் உரிய நிறுவனங்களில் பணியில் சேர அறிவுறுத்தப்பட்டனர். முகாமில் முன்னாள் ஊராட்சித்தலைவர் கமாலுதீன், ஒன்றிய பணி மேற்பார்வையாளர் வேலழகன், குழந்தை நல மருத்துவர் முருகேசன், தலைமையாசிரியர் கமலநாதன், கொள்ளிடம் வியாபாரிகள் சங்கத் தலைவர் ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.