தஞ்சாவூர் மே 26-தேசிய அளவிலான இறகுப்பந்து போட்டியில் 3 ஆம் இடம் பெற்று, வெண்கலப்பதக்கம் வென்ற பேராவூரணி மூவேந்தர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் பாராட்டப்பட்டார். அகில இந்திய அளவிலான ஆல் இந்தியா நேஷனல் சாம்பியன்ஷிப் போட்டி பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் நடைபெற்றது. இதில் 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் பேராவூரணி வட்டம் செங்கமங்கலம்-அம்மையாண்டி மூவேந்தர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த கிருஷ்ணசுந்தர் என்ற மாணவர் இறகுப்பந்து போட்டியில் கலந்து கொண்டு விளையாடி, வெண்கலப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். போட்டியில் வெற்றி பெற்று தமிழகத்திற்கும், பள்ளிக்கும் பெருமை சேர்த்த மாணவர் கிருஷ்ணசுந்தருக்கும், வழிகாட்டிய உடற்கல்வி ஆசிரியருக்கும் பள்ளி தாளாளரும், மூவேந்தர் அறக்கட்டளை தலைவருமான வழக்கறிஞர் லயன் வி.ஏ.டி.சாமியப்பன், செயலாளர் எஸ்.கே.சிதம்பரம், பொருளாளர் பி.பாலசுப்பிரமணியன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். பள்ளி முதல்வர் சம்பத், அறங்காவலர்கள் ஏகாம்பரம், என்.அசோக்குமார், வேலுசாமி, சின்னத்தம்பி, ரவிச்சந்திரன், கோவிந்தராஜன், ராஜசேகர், ரவிச்சந்திரன், சக்கரவர்த்தி செந்தில்குமார், நெடுமாறன், சுப்பிரமணியன், சோமசுந்தரம், வினோத் மற்றும் பெற்றோர்கள் உடனிருந்தனர்.