tamilnadu

img

எல்ஐசி முகவர்கள் போராட்டம்

திருச்சிராப்பள்ளி, ஆக.20- மன்ற முகவர்களுக்கான மெடிக் கிளைம்ஐ டி.பி.ஏ வால் இழுத்தடிப்பு செய்யாமல் உடனே வழங்க வேண்டும். முகவர்களின் மெடிக்கிளைம்க்கு என்று தனி அதிகாரி நியமிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய எல்ஐசி முகவர் சங்கம்(லிகாய்) தஞ்சை கோட்டம் சார்பில் செவ்வாயன்று திருச்சி யூனிட் 1 கிளை அலுவலகத்தில் தர்ணா நடை பெற்றது. போராட்டத்திற்கு கோட்டத் தலை வர் தங்கமணி தலைமை வகித்தார். மேற்கு கோட்ட தலைவர் ராஜேந்தி ரன், கிழக்கு கூட்டத் தலைவர் அன்பு நட ராஜன், கிழக்கு கோட்ட செயலாளர், கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ் மாநிலக்குழு செயல் தலைவர் பூவலிங்கம் துவக்கவுரை ஆற்றினார். ஏஐஐஇஏ கோட்ட துணைத் தலைவர் ஜோன்ஸ், கிளாஸ் 1 அதி காரிகள் சங்க கோட்ட துணைத்தலை வர் பெலிக்ஸ் அமலநாதன் ஆகி யோர் வாழ்த்துரை வழங்கினர்.  போராட்டத்தை விளக்கி பொதுச் செயலாளர் கோபாலகிருஷ்ணன், மாநி லச் செயலாளர் ராஜா, தென் மண்டல குழு உறுப்பினர் வேலுசாமி, கோட்ட பொருளாளர் சம்பத் ஆகியோர் பேசி னர். சிஐடியு மாநகர் மாவட்ட செயலா ளர் ரெங்கராஜன், அகில இந்திய பொதுக்குழு, மாநில, கோட்ட, கிளை சங்க பொருளாளர்கள் நிறைவுரை ஆற்றினர். மேற்கு கோட்ட செயலாளர் திருநாவுக்கரசு நன்றி கூறினார். தர்ணா வில் கரூர், தஞ்சாவூர், பெரம்பலூர், அரி யலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக திருச்சி யூனிட் 1 கிளை அலுவலகம் முன் கோரிக் கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.