கும்பகோணத்தில் சிபிஎம் உறுப்பினர் ரசீது வழங்கல்
கும்பகோணம் ஜூலை 11- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கும்பகோணம் நகர கட்சி உறுப்பினர் ரசீது வழங்கும் விழா கும்பகோணத்தில் நடை பெற்றது. நகர குழு உறுப்பினர் எஸ்.வி.மணி தலைமையேற் றார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்சி பழனிவேலு, சிபிஎம் கட்சியின் இன்றைய சூழ்நிலை குறித்து சிறப்புரை யாற்றி கட்சி உறுப்பினர்களுக்கு ரசீது வழங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சின்னை.பாண்டியன், மாவட்ட குழு உறுப்பினர் ப.பார்த்தசாரதி, நகர குழு செயலாளர் செந்தில்குமார், நகர குழு உறுப்பினர்கள் ஆ.செல்வம், ஆர். ராஜகோபாலன் எஸ்.ஜே.சுப்புராம் ம.கண்ணன், எம்அறிவு ராணி எஸ்டி.நாகராஜன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். விழா வில் கிளை செயலாளர்கள் கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டு உறுப்பினர் ரசீது பெற்றுக் கொண்டனர்.
இறந்த ஆதரவற்ற மூதாட்டியின் உடல் சேவை அமைப்பு மூலம் நல்லடக்கம்
தஞ்சாவூர், ஜூலை 11- தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம், சுப்ரமணியர் கோவில் தெருவை சேர்ந்தவர் மூதாட்டி லைலா (வயது 65). ஆத ரவற்ற நிலையில், இப்பகுதியில் யாசகம் பெற்று வாழ்ந்து வந்தார். இந்நிலையில், அதிராம்பட்டினம் கரையூர்தெரு மாரி யம்மன் கோவில் அருகே புதன்கிழமை காலை இயற்கை எய்தினார். தகவல் அறிந்து வந்த அதிராம்பட்டினம் கிராம நிர்வாக அலுவலர் முருகேசன், இறந்த மூதாட்டியின் உடலை நல்லடக்கம் செய்யும் பணியில் ஈடுபட்டார். இதையடுத்து ‘கிரசண்ட் பிளட் டோனர்ஸ்’ சேவை அமைப்பின் மாவட்டத் தலைவர் பேராசிரியர் கே.செய்யது அக மது கபீர் தலைமையில், அவ்வமைப்பின் முகமது ஆரிப், அலெக்ஸ், அப்ரீத் உள்ளிட்ட தன்னார்வல இளைஞர்கள், அதிரை பைத்துல்மால் சேவை அமைப்பின் ஆம்புலன்ஸ் வாகனத்தின் உதவியோடு, வண்டிப்பேட்டை இடுகாட்டிற்கு உடலை எடுத்துச் சென்று நல்லடக்கம் செய்தனர். அப்போது, அதிராம்பட்டினம் பேரூராட்சி துப்புரவு கண்காணிப்பாளர் வெங்கடேசன் உள்பட பலர் உடன் இருந்தனர்.