tamilnadu

img

உடுமலை சங்கர் கொலை வழக்கில் தமிழக அரசு மேல்முறையீடு செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி, ஜூன் 25- உடுமலை சங்கர் கொலை வழக்கில் தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிழக்கு ஒன்றிய குழு சார்பில் புதனன்று சமயபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் ஒன்றிய செயலாளர் கனகராஜ் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப் பினர் கே.வி.எஸ்.இந்துராஜ், சிஐடியு புறநகர் மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம், ஆட்டோ சங்க மாவட்ட நிர்வாகி சந்திரசேகர், ஜோதிபாசு, முத்து சாமி, ராபின்சன், விசிக தேர்தல் பணிக்குழு தலைவர் ராஜா உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

;