tamilnadu

தஞ்சாவூர் மற்றும் சீர்காழி முக்கிய செய்திகள்

திருச்சிற்றம்பலம் மின் நிலையத்தை தரம் உயர்த்த கோரிக்கை

தஞ்சாவூர் மே.13-தஞ்சாவூர் மாவட்டம் திருச்சிற்றம்பலம் துணை மின்நிலையம் நரியங்காடு என்ற இடத்தில் கடந்த 1993 ஆம் ஆண்டுஅமைக்கப்பட்டது. இந்த துணை மின் நிலையத்தில் இருந்துதிருச்சிற்றம்பலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த25க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின் வினியோகம் செய்யப்படுகிறது. 8000 மெகாவாட் மின் திறனுடன் செயல்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில் தற்போது மின்சார தேவையானது பல மடங்கு அதிகரித்துள்ளது. இதனை ஈடுசெய்யும் விதமாக மின் நிலையத்தின் தரம் உயர்த்தப்படவில்லை. இதனால்அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இதன் காரணமாக குடிநீர்தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. எனவே திருச்சிற்றம்பலம் துணை மின் நிலையத்தின் மின்திறனை 16 ஆயிரம் மெகா வாட்டாக உயர்த்த, கடந்தஇரண்டு ஆண்டுக்கு முன்பு தமிழக அரசு அனுமதி வழங்கியது. அதற்கான மின் உபகரணங்கள், கட்டுமானப் பொருட்கள்ஆகியவை மத்திய மின் தொகுப்பிலிருந்து வழங்கப்பட்டுள் ளன. ஆனால் மின் நிலையப் பணிகள் தொடங்கப்படாமல் கிடப்பில் உள்ளது. எனவே நாளுக்கு நாள் மின் தேவைஅதிகரித்து வரும் நிலையில் திருச்சிற்றம்பலம் மின் நிலையத்தை தரம் உயர்த்தும் பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கொள்ளிடம் பகுதி ரேசன் கடைகளில் பொருட்கள் வழங்குவதில் பாகுபாடு 

சீர்காழி, மே 13-கொள்ளிடம் பகுதியில் உள்ள அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கக் கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றியத்தைச் சேர்ந்த 42 ஊராட்சிகளிலும் உள்ள ரேசன் கடைகளில் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் சமையல் எண்ணெய், மண்எண்ணெய், உளுந்து உள்ளிட்ட பொருட்கள் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு முறையாக வழங்கப்பட்டு வந்தன. ஆனால் கடந்த சில வருடங்களாக குடும்ப அட்டைதாரர்களுக்கு 3 லிட்டர் வீதம் வழங்கப்பட்டு வந்த மண்எண்ணெய் தற்போது ஒரு லிட்டர் வீதம் மட்டுமே வழங்கப்படுகிறது.இதே போல் அனைத்து குடும்ப அட்டைதாரருக்கும் வழங்கப்பட்டு வந்த சமையல் எண்ணெய் கடந்த 3 வருடங்களாக குறைக்கப்பட்டு விட்டதால் அனைத்து ரேஷன் கடைகள் மூலமும் 60 சதவிகித அட்டைதாரர்களுக்கு மட்டுமேவழங்கப்பட்டு வருகிறது. மீதமுள்ள 40 சதவிகித குடும்பத்தினருக்கு வழங்கப்படவில்லை. எனவே அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அத்தியாவசியப் பொருட்களை மீண்டும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என காமராஜ்மற்றும் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை மனுஅனுப்பி உள்ளனர்.