tamilnadu

img

சிறப்பு பொருளாதார மண்டலம் அமைப்பேன்

திருச்சிராப்பள்ளி, ஏப்.5-மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் ஐஜேகே கட்சி வேட்பாளர் பாரிவேந்தர் வெள்ளியன்று மண்ணச்சநல்லூர் மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட பூனாம்பாளையத்தில் பிரச்சாரத்தை செய்தார்.பின்னர் ராசாம்பாளையம், சிறுகுடி, தில்லாம்பட்டி, திருப்பைஞ்சீலி சிவன் கோவில், துடையூர் மெயின் ரோடு, நொச்சியம் மெயின் ரோடு,பாச்சூர்கடைவீதி, அழகிய மணவாளம் உள்ளிட்ட பகுதிகளில் கூட்டணிகட்சி நிர்வாகிகள், தொண்டர்களுடன் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்தார்.வாக்கு சேகரிப்பின் போது வேட்பாளர் பாரிவேந்தர் பேசியதாவது:கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம், தண்ணீர் பிரச்சனைகளை தீர்ப்பேன். சிறப்பு பொருளாதார மண்டலம் கொண்டு வந்தால் வேலைவாய்ப்பு அதிகரித்து இருக்கும் அவைகிடப்பில் போடப்பட்டது. நான் வெற்றிபெற்றால் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றுவேன். இப்பகுதியைச் சுற்றுலாத் தலமாக மாற்ற முயற்சி எடுக்கப்படும். அதன் மூலம் மக்களுக்கு நல்ல வியாபாரம் நடக்கும் என்றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்புறநகர் மாவட்டச் செயலாளர் ஜெயசீலன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கே.வி.எஸ்.இந்துராஜ், மாவட்டக்குழு உறுப்பினர் சம்பத், ஒன்றிய செயலாளர் எம்.ஜி.ரவிச்சந்திரன், திமுக மாவட்ட அவைத்தலைவர் அம்பிகாபதி, ஒன்றிய செயலாளர் இளங்கோவன், மதிமுக புறநகர் மாவட்ட செயலாளர் டி.டி.சி.சேரன், ம.ம.க.சபியுலா மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்தனர்.

;