புதுக்கோட்டை, மே 27-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்சார்பில் ஹைட்ரோ கார்பன் திட்டத் திற்கு எதிராக புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெறவுள்ள இயக்கத்திற்கான ஆலோசனைக் கூட்டம் ஆவுடையார்கோவிலில் ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்றது. ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக ஜூன் 5 முதல் 10-ஆம் தேதிவரைமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிமாநிலம் முழுவதும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு பிரச்சார இயக்கத்தை நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளது. அதனொரு பகுதியாக வருகின்ற ஜூன் 5-ஆம்தேதிபுதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்.
ஜூன் 5 கண்டன ஆர்ப்பாட்டம்
ளில் கந்தர்வகோட்டையை அடுத்த சிவியார் குடிக்காட்டிலிருந்து ஒருகுழுவும், மணமேல்குடியில் இருந்துஒரு குழுவுமாக சுமார் 200 செந்தொண்டர்கள் மற்றும் கலைக்குழுக் களுடன் இரு சக்கர வாகனப் பிரச்சாரம் நடைபெறுகிறது. இரண்டு குழுக்களும் ஜூன் 10-ஆம் தேதி ஆலங்குடியில்சங்கமித்து அங்கு கட்சியின் மாநிலத்தலைவர்கள் பங்கேற்கும் பொதுக் கூட்டம் நடைபெறவுள்ளது.மணமேல்குடியிலிருந்துபுறப்படும் பிரச்சாரப் பயணத்தை வெற்றிகரமாக நடத்துவதற்கான ஆலோசனைக ்கூட்டம் ஆவுடையார் கோவிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் ஏ.பாலசுப்பிரமணியன் தலைமைவகித்தார். கூட்டத்தில் கலந்துகொண்டு மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், செயற்குழு உறுப்பினர்கள் க.செல்வராஜ், சி.சுப்பிரமணியன், சி.அன்பு மணவாளன், ஒன்றியச் செயலாளர்கள் தென்றல் கருப்பையா (அறந்தாங்கி), நெருப்புமுருகேஷ் (ஆவுடையார்கோவில்),கரு.ராமநாதன் (மணமேல்குடி) உள்ளிட்டோர் பங்கேற்றனர்.