நாகப்பட்டினம், மே 28-காவிரிப் படுகையின் விவசாயம், தண்ணீர், சுற்றுச் சூழல், விளை நிலங்கள் உள்ளிட்ட அனைத்தையும் பாழாக் கும் ஹைட்ரோ கார்பன் கொடிய திட்டத்தை எதிர்த்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஜூன் 5 முதல் 10 வரை நடத்தவிருக்கிற பிரச்சார இயக்கத்தின்மூலம் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த நாகை மாவட்டத்தில் சிபிஎம்கீழ்வேளூர், கீழையூர் ஒன்றியங்களின் சார்பில் தேவூரிலும் திருப்பூண்டியிலும் திங்கள், செவ்வாய் இரு நாட்களில் பேரவைக் கூட்டங்கள் நடைபெற்றன.கீழ்வேளூர் ஒன்றியம், தேவூரில் செவ்வாய்க்கிழமை அன்று கட்சியின் பேரவைக் கூட்டம் நடைபெற்றது. ஒன்றியச் செயலாளர் ஜி.ஜெயராமன் பேரவைக்குத் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரும் சட்டமன்ற முன் னாள் உறுப்பினருமான வி.மாரிமுத்து சிறப்புரையாற்றினார். மாவட்டக்குழு உறுப்பினர்கள் எம்.என்.அம்பிகாபதி, என்.எம்.அபுபக்கர், எம்.சந்தி, எம்.செல்வராஜ், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, வாலிபர்சங்க மாவட்டத் தலைவர் வெண்மணிஏ.சிவகுமார், மாதர் சங்க ஒன்றியச் செயலாளர் எஸ்.சுபாதேவி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். ‘மக்களிசைப்பாடகர்’ வெண்மணி மோகன்இங்கர் சால், இயக்கப் பாடல்கள் பாடினார்.கீழையூர் ஒன்றியம், திருப்பூண்டியில் ஒன்றியப் பேரவைக் கூட்டம் திங்கட்கிழமை ஒன்றியச் செயலாளர் எம்.முருகையன் தலைமையில் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளரும் சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான நாகைமாலி சிறப்புரையாற்றினார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.முத்துப்பெருமாள், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் த.லதா, மாவட்டக் குழு உறுப்பினர் எம்.அப்துல் அஜீஸ், விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் கே.சித் தார்த்தன் மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள், கிளைச் செயலாளர்கள் கலந்துகொண்டனர்.