tamilnadu

இடப் பிரச்சனையில் வீடு இடிப்பு

தஞ்சாவூர், ஜூலை 28- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள ஆவ ணம் முஸ்லீம் தெருவில் வசிப்பவர் முபாரக்நிஷா(47). இவரது கணவர் அப்துல் ரஜாக். இவர்களது 3 மகள்களுக்கும் திரு மணம் நடைபெற்று விட்டது. மகன் முகமது தருஸ்லின் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அப்துல்ரசாக் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். முபாரக்நிஷா மட்டும் ஆவணத்தில் உள்ள மாடி வீட்டில் தனி யாக வசித்து வந்தார்.                இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் காசிம்புதுப்பேட்டையைச் சேர்ந்த உறவினர் சேக்அலாவுதீன் என்பவருக்கும் முபாரக் நிஷாவுக்கும் ஆவணத்தில் வீடு உள்ள பகுதியில் இடம் தொடர்பான பிரச்னை இருந்து வந்த தாக கூறப்படுகிறது. கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஜே.சிபி.இயந்திரம் உதவியுடன் சேக்அலாவுதீன், முபாரக்நிஷா வீட் டினை இடித்துள்ளார்.