நாகப்பட்டினம், மே 27-கடந்த நவம்பர் மாதம் 15 அன்று நள்ளிரவில் நாகைமாவட்டத்தைத் தாக்கிய கஜா புயலில் மாவட்ட மக்கள்மிகவும் பாதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட மக்களுக்காகப் பல்வேறு பல்வேறு பகுதிகளிலிருந்தும் பொதுமக்கள்,தொண்டு நிறுவனங்கள் வழங்கிய நிவாரணப் பொருட்கள் அரசின் மாவட்ட நிர்வாகம் வழியாகப் பெறப்பட்டு நாகை அரசுத் தலைமை மருத்துவமனைக்கு அருகிலுள்ள மாவட்ட நுகர்பொருள்வாணிப சேமிப்புக் கிடங்கில் வைக்கப்பட்டன.ஆனால் இந்த நிவாரணப் பொருள்கள், புயலில் பாதிக்கப்பட்ட மக்களுப் போய்ச் சேரவில்லை. சேமிப்புக் கிடங்கின் ஊழியர்களும், அவர்களது உறவினர்களும் சேர்ந்து நிவாரணப் பொருள்களை எடுத்துச்சென்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் வாகனங்களில் நிவாரணப் பொருள்கள் எடுத்துச் செல்லப்படுவதை அறிந்த பொதுமக்கள், கிடங்கின் பொறுப் பாளரை சூழ்ந்த போது அவர்அங்கிருந்து தப்பித்து ஓடி விட்டார். கொள்ளை போன நிவாரணப் பொருள்கள் போக மீதிப் பொருள்கள் பல, கிடங்கு முழுவதும் வீணாகி சிதறி கிடக்கின்றன.