திருச்சிராப்பள்ளி, செப்,29- திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழ கத்தில் 36-வது பட்டமளிப்பு விழா வருகிற 1-ந் தேதி நடைபெற உள்ளது. விழாவில் பாரதிதாசன் பல்கலைக்கழக வேந்தரும், தமிழக கவர்னருமான பன்வாரிலால் புரோஹித் தலைமை தாங்குகிறார். பல்கலைக்கழக இணைவேந்தர் அன்பழகன், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பாஸ்கரன் ஆகியோர் பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றுகின்றனர். விழாவில் பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் மணிசங்கர், பதிவாளர் கோபிநாத் மற்றும் ஆட்சிமன்றக் குழு உறுப்பினர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொள்கின்றனர்.