இந்திய மருத்துவ கழகத்தை கலைக்க கூடாது, மருத்துவ படிப்பில் நெக்ஸ்ட் தேர்வினை புகுத்தக்கூடாது. புதிய கல்வி கொள்கையை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி கிஆபெ விசுவநாதம் அரசு மருத்துவ கல்லூரி மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் ஒருபகுதியாக புதனன்று மாலை மருத்துவக் கல்லூரி முன்பு மாணவ, மாணவிகள் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.