tamilnadu

img

அனைவருக்கும் நூறு நாள் வேலை வழங்கிடுக!

திருச்சிராப்பள்ளி, ஜூன் 25- 100 நாள் வேலைக்கு வரும் அனைவருக்கும் தொடர்ச்சியாக வேலை வழங்கி சட்டக்கூலி ரூ,229 வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் செவ்வாயன்று திருச்சி மாவட்டம் தா.பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. ஒன்றிய தலைவர் தங்கவேல் தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் முத்துசெல்வன், விதொச புறநகர் மாவட்ட செயலாளர் பழனிச்சாமி, மாவட்ட துணைத் தலைவர் வீரவிஜயன், ஒன்றிய செயலாளர் சந்திரமோகன், விச ஒன்றிய செய லாளர் சேகர், சிபிஎம் ஒன்றிய செயலாளர் காமராஜ், சிஐடியு ஒன்றிய செயலாளர் முருகேசன் உள்பட 180 பேர் கலந்து கொண்டனர். உப்பிலியபுரம் பிடிஓ அலுவலகத்தில் நடைபெற்ற போராட்டத்திற்கு விதொச ஒன்றிய தலைவர் கணேசன் தலைமை வகித்தார்.  விதொச மாவட்ட செய லாளர் பழநிசாமி, ஒன்றிய துணைத் தலைவர் ஜோதி, துணை செயலாளர் வினோத், மாவட்டக்குழு உறுப்பினர்கள் திலகவதி உள்பட 1321 பேர் கலந்து கொண்டனர். மருங்காபுரி வட்டத்தில் நடைபெற்ற போராட்டத்திற்கு வி.ச.செயலாளர் முரு கேசன், விதொச அண்ணாதுரை ஆகியோர் தலைமை வகித்தனர். சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.வி.எஸ்.இந்துராஜ், வட்ட செயலாளர் தியாகராஜன், சிஐடியு மாவட்டக்குழு உறுப்பினர் அழகர்சாமி, ஓஎச்டி சங்க ஒன்றிய தலைவர் ராமசாமி உள்பட 219 பேர் கலந்து கொண்டனர்.   மணப்பாறையில் நடைபெற்ற போராட்டத்திற்கு வட்ட தலைவர் கருப்பையா தலைமை வகித்தார். விதொச மாநில தலைவர் ராஜ், வாலிபர் சங்க புறநகர் மாவட்ட தலைவர் பாலு உள்பட 260 பேர் கலந்து கொண்டனர்.

வையம்பட்டியில் நடைபெற்ற போராட்டத்திற்கு விவசாய சங்க ஒன்றிய செய லாளர் வீரமணி, முனியப்பன் ஆகியோர் தலைமை வகித்தனர். சிபிஎம் ஒன்றிய செய லாளர் வெள்ளைச்சாமி, விவசாய சங்க ஒன்றிய செயலாளர் திருநாவுக்கரசு, சிஐடியு ஒருங்கிணைப்பாளர் வெள்ளைச்சாமி, சிபிஎம் ஒன்றியக்குழு முருகன், விச ஒன்றிய துணை செயலாளர் ராஜ், ஒன்றிய பொருளாளர் சந்தியாகு உள்பட 110 பேர் கலந்து கொண்டனர்.  அந்தநல்லூர் போராட்டத்திற்கு விதொச ஒன்றிய தலைவர் சுப்ரமணியன் தலைமை வகித்தார். விதொச ஒன்றிய செயலாளர் சீனிவாசன், பொருளாளர் செந்தில்குமார், சிபிஎம் மாவட்ட செயலாளர் ராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பி னர் ஜெயபால், ஒன்றிய செயலாளர் வினோத் மணி, விதொச மாவட்ட செயலாளர் தங்கதுரை, மாவட்ட தலைவர் செல்வராஜ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.  லால்குடி போராட்டத்திற்கு விதொச ஒன்றிய தலைவர் பாலா தலைமை வகித்தார். சிபிஎம் புறநகர் மாவட்ட செயலாளர் ஜெயசீலன், லால்குடி ஒன்றிய செய லாளர் ஜெகதீசன், வி.ச.ஒன்றிய செயலாளர் பாலு, ஒன்றிய தலைவர் சீத்தா ராமன், விதொச ஒன்றிய பொருளாளர் மணிகண்டன், ஒன்றியக்குழு உறுப்பினர் தங்கராஜ், மாதர் சங்க ஒன்றிய செயலாளர் கோமதி, டிஒய்எப்ஐ ஒன்றிய செய லாளர் திலக்பிரபு, கட்டுமான சங்க மோகன், மகிழம்பாடி, நெரிஞ்சலகுடி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 120 பேர் கலந்து கொண்டனர். பிடிஓவிடம் மனுவை அளித்த சிபிஎம் புறநகர் மாவட்ட செயலாளர் ஜெயசீலன், மனு அளித்த அனைவருக்கும் இங்கிருந்து செல்லமாட்டோம். வேலை வழங்கும் வரை தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என தெரிவித்தார். இதனையடுத்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் மனு கொடுத்த அனைவருக்கும் நாளை முதல் வேலை தருவதாக உறுதியளித்ததை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். இதே போன்று புள்ளம்பாடி, துறையூர் உள்ளிட்ட பகுதிகளி லும் போராட்டம் நடைபெற்றது. மண்ணச்சநல்லூரில் போராட்டத்திற்கு விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் கருணாநிதி தலைமை வகித்தார். செல்வராஜ், செல்வம், பாஸ்கர், ஹரி கிருஷ்ணன், காமராஜ், மதியழகன், தர்மலிங்கம், முத்துவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிஐடியு மாவட்ட செயலாளர் சிவராஜ், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் சி.முருகேசன், சிபிஎம் ஒன்றிய செயலாளர்கள் எம்.ஜி.ரவிச்சந்தி ரன், ஏ.கனகராஜ், விவசாயத் தொழிலாளர் சங்க துணைச் செயலாளர் டி.நல்லை யன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். இறுதியாக வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனுக்களை கொடுத்தனர். சிறுகாம்பூர், திருப்பைஞ்சிலி, கரியமாணிக்கம், ஆயக்குடி உள்பட பல கிராமங்களில் இருந்து 300- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 

நாகப்பட்டினம் 

நாகை ஊராட்சி ஒன்றிய அலுவலகம முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு, வி.தொ.ச.நாகை ஒன்றியச் செயலாளர் எஸ்.என் ஜீவாராமன் தலைமை வகித்தார். வி.ராதா, கே.மாரிமுத்து, ஏ.மாலா முன்னிலை வகித்தனர். சி.பி.எம். மாவட்டச் செய லாளரும் சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான நாகைமாலி சிறப்புரையாற்றி னார். விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலப் பொருளாளர் எஸ்.சங்கர் கோரிக்கை களை விளக்கி உரையாற்றினார். சி.பி.எம். நாகை ஒன்றியச் செயலாளர் பி.டி.பகு, மாவட்டக்குழு உறுப்பி னர்கள் பி.கே.ராஜேந்திரன், எம்.சுப்பிரமணியன், கே.செந்தில்குமார், நாகை நகரச் செயலாளர் எம்.பெரியசாமி, வி.ச. மாவட்டக்குழு உறுப்பினர் பி.சந்திரன், வி.ச.ஒன்றி யச் செயலாளர் என்.வடிவேல், கே.கணபதி, இ.ராமச்சந்திரன், என்.ரவி, ஏ.வடி வேல், ஏ.கே.குமார், இ.பூங்கொடி, ஆர்.பத்மாவதி, பி.அன்பழகன், ஏ.விஜயகுமாரி, ஆர்.ஜோதிபாசு, உள்ளிட்டோர் பங்கேற்றனர். முடிவில் வட்டார வளர்ச்சி அலுவலர் எஸ்.எஸ்.வெற்றிச்செல்வன், மேலாளர் குமரேசன் ஆகியோரிடம் மனுக்கள் அளிக்கப்பட்டன.  கீழையூரில் வி.தொ.ச. மாவட்டத் தலைவர் கே.சித்தார்த்தன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. ஏ.முருகையன், எஸ்.வீராச்சாமி, ஆர்.தெட்சிணா மூர்த்தி, ஏ.உமாநாத் அகியோர் முன்னிலை வகித்தனர். சி.பி.எம். மாநிலக்குழு உறுப்பினரும் சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான வி.மாரிமுத்து கோரிக்கை களை விளக்கிச் சிறப்புரையாற்றினார்.

சி.பி.எம். கீழையூர் ஒன்றியச் செயலாளர் எம்.முருகையன், மாவட்டக்குழு உறுப்பினர் எம்.அப்துல்அஜீஸ், வாலிபர் சங்க மாவட்டப் பொருளாளர் டி. வெங்கட்ராமன், எஸ்.டி.செல்வராஜ், எஸ்.ராஜா, ஆர்.ராமமூர்த்தி, கே.செளந்தர ராஜன் கே.கிருஷ்ணன், கே.டி.எம்.சுஜாதா, கே.பாப்பாத்தி, எஸ்.பரிமளா, பி.லெட்சுமி காந்தன், இ.நாகப்பன், ஆர்.எம்.பழனிவேல், ஏ.ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  கீழ்வேளூரில் போராட்டத்திற்கு வி.தொ.ச. ஒன்றியத் தலைவர் ஆர்.முத்தையா தலைமை வகித்தார். ஆர்.மீரா, ஏ.எம்.பாலசுப்பிரமணியம், முன்னிலை வகித்தனர். சி.பி.எம். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஜி.ஜெயராமன், மாவட்டக்குழு உறுப்பி னர்கள் என்.எம்.அபுபக்கர், எம்.செல்வராஜ், எம்.என்.அம்பிகாபதி, மாணவர் சங்க மாவட்டத் தலைவர் ஏ.சிவகுமார், ஆர்.கிருஷ்ணமூர்த்தி, எஸ்.மோகன் இங்கர்சால் பங்கேற்றனர்.  தலைஞாயிறு போராட்டத்திற்கு வி.தொ.ச.ஒன்றியத் தலைவர் எம்.ஆறுமுகம் தலைமை வகித்தார். சி.பி.எம்.தலைஞாயிறு ஒன்றியச் செயலாளர் ஏ.வேணு, என். முருகையன், ஏ.ராஜா, ஜி.செல்வராஜ், ஜி.பெருமாள், என்.வி.ராமமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வேதாரணியம் போராட்டத்திற்கு வி.தொ.ச.ஒன்றியச் செயலாளர் ஏ.வெற்றி வேல் தலைமை வகித்தார். சி.பி.எம்.வேதாரணியம் ஒன்றியச் செயலாளர் வி. அம்பிகாபதி, மாவட்டக்குழு உறுப்பினர் மா.முத்துராமலிங்கம், வி.ச.ஒன்றியச் செயலாளர் கோவை.சுப்பிரமணியன், பி.எஸ்.பன்னீர்செல்வம், வி.இளைய பெருமாள் உள்ளிட்டோர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கோரிக்கைகள் அடங்கிய மக்களின் மனுக்களை அளித்தனர்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம் குன்றாண்டார்கோவில் போராட்டத்திற்கு சங்க ஒன்றியச் செயலாளர் பி.மருதப்பா தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் சிறப்புரையாற்றினர். கோரிக்கை களை வலியுறுத்தி நிர்வாகிகள் கே.தங்கவேல், பழனிவேலு, சந்திரா, செல்லத்தம்பி உள்ளிட்டோர் பேசினர். அன்னவாசலில் ஒன்றியச் செயலாளர் எம்.ஜோஷி தலைமை வகித்தார். மாவட்டப் பொருளாளர் கே.சண்முகம் சிறப்புரையாற்றி னார். நிர்வாகிகள் எம்.ஆர்.சுப்பையா, ரகுபதி, மணி, ஆறுமுகம் உள்ளிட்டோர் பேசினர். கந்தர்வகோட்டையில் ஒன்றியத் தலைவர் பி.மணி தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் எம்.சண்முகம் சிறப்புரையாற்றினார். ஒன்றியச் செயலாளர் கே.சித்திரைவேல், நிர்வாகிகள் வி.ரெத்தினவேல், பி.வீராச்சாமி, இளையராஜா, ரஜினி, நாராயணசாமி உள்ளிட்டோர் பேசினர். மணமேல்குடியில் ஒன்றியத் தலைவர் பா.ஆறுமுகம் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் ஏ.பால சுப்பிரமணியன் சிறப்புரையாற்றினார். நிர்வாகிகள் கரு.ராமநாதன், காளிதாஸ், கோவிந்தராஜ் உள்ளிட்டோர் பேசினர். அறந்தாங்கியில் ஒன்றியத் தலைவர் எம்.செல்லமுத்து தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் ஏ.பாலசுப்பிரமணியன், ஒன்றியச் செயலாளர் ஆர்.ராதா, நிர்வாகி கள் தென்றல் கருப்பையா, கே.தங்கராஜ், எம்.மேகவர்ணம், எஸ்.சரோஜா உள்ளிட்டோர் பேசினர். ஆவுடையார் கோவிலில் ஒன்றியச் செயலாளர் வே.வீரையா தலைமை வகித்தார். விவசாயிகள் சங்க மாவட்டப் பொருளாளர் சி.சுப்பிரமணி யன், விதொச ஒன்றியத் தலைவர் ஏ.வைரமணி, நிர்வாகிகள் நெருப்பு முரு கேஷ், எம்.எஸ்.கலந்தர் சபரிநாதன் உள்ளிட்டோர் பேசினர். இப்போராட்டங்களில் ஆயிரத்துக்கும் அதிகமான விவசாயத் தொழிலாளர்கள் பங்கேற்றனர். முடிவில் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது.

தரங்கம்பாடி

அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் வட்ட செயலாளர் காபிரி யேல் தலைமையில் குடிநீர் கேட்டு மனுக் கொடுக்கும் போராட்டம் நாகை மாவட்டம் செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு செவ்வாயன்று நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் வட்ட செயலாளர் பி.சீனிவாசன், வி.ச வட்ட செய லாளர் இராசையன், கோவிந்தசாமி, பஷீர் அகமது, சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பி னர் ரவிச்சந்திரன், வி.தொ.ச வட்டத்தலைவர் பரமசிவம், வட்ட பொருளாளர் அமிர்தலிங்கம், வாலிபர் சங்க வட்ட தலைவர் சரவணன், மாதர் சங்க வட்ட செயலாளர் வெண்ணிலா உள்ளிட்டோர் உரையாற்றினர். பின்னர் வட்டார வளர்ச்சி அலுவலரை சந்தித்து கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை அளித்தனர். அரியலூர் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஒன்றிய அலுவலகம் முன்பு விவசாய ஒன்றிய செயலாளர் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. மாவட்ட பொரு ளாளர் சி.உத்திராபதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ஆர். மணிவேல், ஒன்றிய செயலாளர் எம்.வெங்கடாஜலம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  தா.பமூரில் சங்க ஒன்றியச் செயலாளர் எ.தங்கராசு தலைமை வகித்தார். சங்க மாவட்ட செயலாளர் எம்.இளங்கோவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆண்டி மடத்தில் முருகன் தலைமை வகித்தார். கட்சி மாவட்ட குழு உறுப்பினர் ரமேஷ், ஒன்றிய செயலாளர் பரமசிவம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தஞ்சாவூர்

ஞ்சாவூர் தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் ஒன்றியம் சார்பாக திருவிடைமருதூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலக்குழு  உறுப்பினர் நாகராஜன் தலைமையில் 100 நாள் வேலையை அனைவருக்கும் வழங்கக் கோரி மனுக் கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.  ஒன்றிய தலைவர் தருமையன், ஒன்றிய செயலாளர் ரங்கசாமி பொருளாளர் தட்சிணாமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் திருவிடைமருதூர் வடக்கு ஒன்றிய செயலாளர் சா.ஜீவபாரதி, தெற்கு ஒன்றிய செயலாளர் எஸ்.பழனிவேல், மாவட்டக்குழு உறுப்பினர் பக்கிரிசாமி, அருளரசன் மா.சங்கர் முருகேசன் டிஎன் ஆறுமுகம் ஆகியோர் விளக்க உரை ஆற்றினர்.  இதே போல் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க குடந்தை ஒன்றியம் சார்பாக கும்பகோணம் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு கொடுத்து போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு மாவட்ட துணை தலைவர் வழக்கறிஞர் வெ. ஜீவக்குமார் தலைமை ஏற்றார் ஒன்றிய தலைவர் ஆர்நாகமுத்து ஒன்றிய செய லாளர் ஆர்.தக்ஷிணாமூர்த்தி ஒன்றிய பொருளாளர் கலையரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குடந்தை ஒன்றியச் செயலாளர் பிஜே. ஏசுதாஸ், குடந்தை நகர செயலாளர் செந்தில்குமார் விவசாய சங்க ஒன்றிய செய லாளர் என்கணேசன் ஒன்றிய தலைவர் குணசேகரன் மாதர் சங்க மாவட்ட துணை தலைவர் அறிவுராணி ஒன்றிய தலைவர் ஆர்காலா ஆகியோர் உரை யாற்றினர். போராட்டத்தில், நூறு நாள் வேலைத் திட்டத்தை அனைத்து ஊராட்சி களிலும் தொடர்ந்து வழங்கிட வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட சட்டக்கூலி ரூ.222 முழுமையாக வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. 

தஞ்சாவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு விவசாயத் தொழி லாளர் சங்க ஒன்றிய செயலாளர் கே.அபிமன்னன் தலைமை வகித்தார். விதொச மாவட்டக் குழு உறுப்பினர் என்.ஜி.அந்தோணி சாமி, ஒன்றியப் பொருளாளர் ஏ. விஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  விவசாய சங்க ஒன்றியத் தலை வர் ஞானமாணிக்கம், ஒன்றியச் செயலாளர் சௌந்தரராஜன், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் எம். மாலதி, விதொச, ஒன்றியக் குழு உறுப்பினர்கள் காளிதாஸ், ஜான் பீட்டர், எஸ்.கருப்பையா, ஏ.ராஜ் குமார், எல்.ராமராஜ் உள்ளிட்ட 276 பேர் கலந்து கொண்டு கோரிக்கை மனு அளித்தனர். தஞ்சாவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு விவசாயத் தொழி லாளர் சங்க ஒன்றிய செயலாளர் கே.அபிமன்னன் தலைமை வகித்தார். விதொச மாவட்டக் குழு உறுப்பினர் என்.ஜி.அந்தோணி சாமி, ஒன்றியப் பொருளாளர் ஏ. விஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  விவசாய சங்க ஒன்றியத் தலை வர் ஞானமாணிக்கம், ஒன்றியச் செயலாளர் சௌந்தரராஜன், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் எம். மாலதி, விதொச, ஒன்றியக் குழு உறுப்பினர்கள் காளிதாஸ், ஜான் பீட்டர், எஸ்.கருப்பையா, ஏ.ராஜ் குமார், எல்.ராமராஜ் உள்ளிட்ட 276 பேர் கலந்து கொண்டு கோரிக்கை மனு அளித்தனர். 

இதையடுத்து, போராட்டக்கா ரர்களுடன் சமாதானப் பேச்சு வார்த்தை நடத்திய ஒன்றிய அதி காரிகள், ‘வரும் வாரத்தில் இருந்து ரூ.175-க்கு குறையாமல் கூலி வழங்கப்படும். சுழற்சி முறையை ரத்து செய்து தொடர்ச்சியாக வேலை வழங்கப்படும் என உள் ளிட்டவை குறித்து உறுதியளித்தனர். பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன் றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு விதொச மாவட்டத் தலைவர் ஆர்.வாசு தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் உலகநாதன், ஒன்றியத் தலைவர் குமரேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிபிஎம் ஒன்றிய செய லாளர் எஸ்.கந்தசாமி, விதொச நிர்வாகிகள் பெஞ்சமின், முனு சாமி, ஞானசேகரன், தமிழ்ச்செல் வன், தமயந்தி உள்ளிட்ட 153 பேர் கலந்து கொண்டனர்.  முன்னதாக ஊராட்சி ஒன்றிய ஆணையர் பொது மக்களிடம் வந்து மனு வாங்க தாமதம் செய்த தால், கோரிக்கைகளை முழங்கி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதை யடுத்து உடனடியாக வந்து கோரி க்கை மனுக்களை பெற்றுக் கொண்ட ஊராட்சி ஒன்றிய ஆணை யர் கோரிக்கைகள் சரி செய்யப் படும்’ என உறுதியளித்தார். 

திருவோணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடை பெற்ற போராட்டத்திற்கு விதொச ஒன்றியத் தலைவர் எஸ்.பாஸ்கர் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் எஸ்.சின்னப்பா முன் னிலை வகித்தார். சிபிஎம் ஒன்றி யச் செயலாளர் பி.கோவிந்தராசு, மாவட்டக் குழு உறுப்பினர் கே.ராம சாமி, விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் கே.ரவிச்சந்திரன், நிர்வாகிகள் பி.துரை, பி.அய்யாத் துரை, ஆர்.பழனிவேலு, கே.சுந்தர ராசு, நாகராஜ், சேகர், ஏ.ராசு, ஆர்.சி. ரவி மற்றும் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.  சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடை பெற்ற போராட்டத்திற்கு, விதொச ஒன்றியச் செயலாளர் ஆ.இளங் கோவன் தலைமை வகித்தார். ஒன்றியப் பொருளாளர் செந்தில், கிளைச் செயலாளர் முருகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக் குழு உறுப்பினர் வீ. கருப்பையா ஒன்றியச் செயலாளர் ஆர்.எஸ். வேலுச்சாமி விவசாய சங்க பொறுப்பாளர் ஊமத்தநாடு தமிழன் உள்ளிட்டோர் ஒன்றிய ஆணையர் கிருஷ்ணமூர்த்தியிடம் 51-க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

அம்மாபேட்டையில் நடை பெற்ற போராட்டத்திற்கு விதொச ஒன்றியச் செயலாளர் ஏ.செல்வ ராஜ் தலைமை வகித்தார். சிபிஎம் நகரச் செயலாளர் ரவி, ஒன்றிய செயலாளர் ஏ.நம்பிராஜன், விதொச கிளைச் செயலாளர் ராஜேந்திரன், விவசாய சங்க ஒன் றிய செயலாளர் கே.முனியாண்டி, விதொச ஒன்றியத் தலைவர் கே. கோபால், விதொச ஒன்றியப் பொரு ளாளர் தங்கையன், சுந்தரவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் 50 கோரிக்கை மனு அளிக் கப்பட்டது. திருவையாறு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடை பெற்ற போராட்டத்திற்கு விதொச ஒன்றியச் செயலாளர் பிரதீப் ராஜ்குமார் தலைமை வகித்தார். ஒன்றியத் தலைவர் செல்வகுமார் முன்னிலை வகித்தார். சிபிஎம் ஒன்றியச் செயலாளர் ஏ.ராஜா, மாவட்டக் குழு உறுப்பினர் எம்.ராம், விதொச ஒன்றியக்குழு உறுப்பினர் பி.கீதா, கே. ராம மூர்த்தி, கலியமூர்த்தி, புண்ணிய மூர்த்தி மற்றும் திருப்பழனம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.  பூதலூர் விவசாயத் தொழிலா ளர் சங்கம் தெற்கு, வடக்கு ஒன்றி யம் சார்பில் நடைபெற்ற போராட் டத்திற்கு விதொச வடக்கு ஒன்றி யச் செயலாளர் எம்.சம்சுதீன் தலைமை வகித்தார். தெற்கு ஒன் றிய பொறுப்பாளர் கே.மருத முத்து, தெற்கு ஒன்றிய தலைவர் எஸ்.வியாகுலதாஸ், வடக்கு ஒன்றிய துணைத் தலைவர் சி.சிவ சாமி ஆகியோர் முன்னிலை வகித்த னர். சிபிஎம் வடக்கு ஒன்றியச் செய லாளர் கே.காந்தி, நிர்வாகிகள் பி. கலைச்செல்வி, பாஸ்கரன், ராஜ கோபால், முஹம்மது சுல்தான், மலர்கொடி உள்ளிட்ட 271 பேர் கலந்து கொண்டனர்.