தஞ்சாவூர் ஜூன் 2-தஞ்சாவூர் ஆவின் நிறுவனத்தின் சார்பில் உலக பால் தின விழா சனிக்கிழமை நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள ஆவின் நிர்வாக அலுவலகத்தில் நிறுவனத்தின் தலைவர்(பொ) எஸ்.பாலாஜி தலைமையில் நடைபெற்றது. தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் அதிகளவில் கூட்டுறவு சங்கங்களுக்கு பால் வழங்கிய உறுப்பினர்களைப் பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டன. தஞ்சை மாவட்டத்தில் சிறந்த பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கமாக திருக்கானூர்பட்டியும், திருவாரூர், நாகை மாவட்டங்களில் சிறந்த பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கமாக காவேரிபூம்பட்டினம் ஆகியவை தேர்வு செய்யப்பட்டு பரிசு வழங்கப்பட்டது. மேலும் சிறப்பாக சேவை செய்து வரும் 10 பால் முகவர்களுக்கு பாராட்டு கேடயம் வழங்கப்பட்டது. தஞ்சாவூர் பால்வளத் துணைப் பதிவாளர் ந.இளங்கோவன், திருவாரூர் பால் வளத் துணைப் பதிவாளர் து.சித்ரா, ஆவின் பொது மேலாளர் சு.நாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். விரிவாக்க அலுவலர் எஸ்.யமுனா மகேஸ்வரி நன்றி கூறினார்.