திருத்துறைப்பூண்டி, செப்.20- தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி திருத்துறைப்பூண்டி நகரக்குழு சார்பில் பேரவை – கருத்தரங்கம் செவ்வாயன்று தியாகி.சிவராமன் நினைவகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்டக்குழு உறுப்பினர் மா.சண்முகம் தலைமை வகித்தார். முதல் நிகழ்வாக திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. சாதி ஒழிப்பில் தந்தை பெரியார், புரட்சியாளர் அம்பேத்கர், தோழர்.பி.எஸ்.ஆர், தீண்டாமை ஒழிப்பு முன்னணி கடந்து வந்த பாதை போன்ற தலைப்புகளில் மாநில துணைத் தலைவர் சின்னை.பாண்டி, எழுத்தாளர் ஐ.வி.நாகராஜன், மாவட்டச் செயலாளர் கே.தமிழ்மணி, மாவட்டத் தலைவர் வழக்கறிஞர்.கதாக அரசு தாயுமானவன் ஆகியோர் பேசினர். பேரவையில் நகரத் தலைவர் இராமசாமி, செயலாளர் சண்முகம், பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி, துணைத் தலைவர் வேதரெத்தினம், துணைச் செயலாளர் இன்குலாப், வினோத்குமார் கொண்ட 7 பேர் தேர்வு செய்யப்பட்டனர். கல்வி நிலையங்களில் சாதி அடை யாளக் கயிரை மாணவர்கள் கட்ட கூடாது. அரசு பதிவேட்டில் சாதியின் பெயரில் இடம்பெற்றுள்ள தெரு, சாலை பெயர்களை நீக்கி ஊர் பெயரிலேயே அழைக்க வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் சி.பி.எம் மாவட்டக்குழு உறுப்பினர்கள் டி.சுப்ரமணியன், எஸ்.சாமிநாதன், நகர செயலாளர் கே.ஜி.ரகுராமன், நகரக்குழு உறுப்பினர்கள் கோபு, ஜெயபிரகாஷ், ஏ.கே.செல்வம், ஒன்றியச் செயலாளர் காரல்மார்க்ஸ், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் பி.என்.தங்கராசு மற்றும் வாலிபர்கள், மாதர்கள், தொழிற்சங்க தோழர்கள் கலந்து கொண்டனர்.