tamilnadu

img

இலவச லேப்டாப் வழங்கும் நிகழ்ச்சி

தரங்கம்பாடி செப்16- நாகை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம்,சங்கரன்பந்தல் அரசு மேல்நிலைப்பள்ளியில் 2018-19 கல்வியாண்டில் மேல்நிலை வகுப்பு முடித்த மாணவர்களுக்கு அரசு சார்பில் வழங்கப்படும்  இலவச லேப்டாப் வழங்கப்படாமலிருந்தது.  இந்நிலையில் விடுபட்ட மாணவர்களுக்கு எம்.எல்.ஏ பவுன்ராஜ் லேப்டாப்களை திங்களன்று வழங்கினார். தலைமையாசிரியர் அசோக்,முன்னாள் ஊராட்சி தலைவர் உதயசங்கர்,பெற்றோர் ஆசிரியர் கழக செயற்குழு உறுப்பினர் பகவதி மற்றும் ஆசிரியர்கள்,அலுவலர்கள்,பெற்றோர்கள் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டனர்.நிறைவாக உதவித் தலைமையாசிரியர் கோபாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.

;