திருச்சிராப்பள்ளி, ஆக.13- கொரோனா ஊரடங்கால் தனியார் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்ற னர். எனவே தனியார் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு அரசு சார்பில் மாதம் ரூ. 10,000, பேருந்து உரிமையா ளர்கள் ரூ 5000 வழங்கிடக் கோரி சிஐ டியு தனியார் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் தொழிலாளர் நலச்சங்கம் சார்பில் வியாழனன்று திருச்சி ஆட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் செல்வம் தலைமை வகித்தார். சாலை போக்குவரத்து தொழிலாளர் நல சங்க மாநில துணை செயலாளர் வீர முத்து, மாவட்டச் செயலாளர் செந்தில் குமார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.