மீனவர்கள் கோரிக்கை
அறந்தாங்கி, பிப்.7- புதுக்கோட்டை மாவட்டம் மண மேல்குடி தாலுகா கோட்டைபட்டி னத்தில் அறந்தாங்கி கோட்டாட்சியர் எம்.குனசேகர் தலைமையில் மீனவர் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாக்க அலுவலர் சௌந்தரராஜன், மீன்வளத்துறை உதவி இயக்குநர் குமரேசன், மன மேல்குடி வட்டாட்சியர் சிவக்குமார், ஆவுடையார்கோவில் வட்டாட்சியர் மார்ட்டின், மாவட்ட சமுதாய வளர்ச்சி அலுவலர் பிரபு கண்ணன், அறந்தாங்கி மின்வாரிய செயற்பொறியாளர் கண்ணன், கட லோர காவல் குழுமம் சார்பு ஆய்வாளர் ராஜ்குமார் மற்றும் மனமேல்குடி ஒன்றிய குழு துணை தலைவர் முகம்மது அப்துல்லா மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொன்டனர். கூட்டத்தில் கட்டுமாவடி முதல் ஆர் புதுப்பட்டினம் வரை உள்ள விசைப் படகு மீனவர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு, கடற்கரை பகுதியில் மீன் பதப்படுத்தும் தொழிற்சாலை அமைக்க வேண்டும், கோட்டை பட்டினம், ஜெகதாபட்டினம் மீன்பிடி துறைமுகத்தை விரிவுப்படுத்த வேண்டும் மீனவர்கள் குடியிருப்பு பகுதி களில் சாலை, குடிதண்ணீர் வசதி செய்து தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வைத்தனர்.