tamilnadu

img

மிளகு சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு விவசாயிகளே பயிற்சி

புதுக்கோட்டை, நவ.20- புதுக்கோட்டை மாவட்டம் ஆலங் குடியை அடுத்த சேந்தன்குடியில் சம வெளியில் மிளகு சாகுபடி செய்வது குறித்து விவசாயிகளுக்கு மிளகு சாகுபடி விவசாயிகளே பயிற்சியும் செயல்முறை விளக்கமும் அளித்தனர். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங் குடி தாலுகாவில் உள்ள கீரமங்கலம், வடகாடு, சேந்தன்குடி பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் நெல், வாழை, கடலை, சோளம், மலர் வகைகள் உள்ளிட்ட பயிர்களையே சாகுபடி செய்து வந்த னர். மேற்படி விவசாயத்தில் போதிய வருமான கிடைக்காததால்; 10 ஆண்டுக ளுக்கு முன்பாக மாற்று பயிர் சாகுபடி செய்ய முடிவெடுத்து தென்னை, தேக்கு,  மா, பலா, வேம்பு உள்ளிட்ட மரங்களை வளர்த்து அதனருகில் மிளகு கொடிக ளையும் நட்டு படரவிட்டனர்.  மலைப் பிரதேசங்களில் மட்டுமே பயிரிடப்பட்டு வந்த மிளகு சாகுபடி சம வெளிகளிலும் வளர்ந்து பலன் கொடுக்கும் என்பதை இப்பகுதி விவசா யிகள் அறிந்துகொண்டனர். இதனைத் தொடர்ந்து படிப்படியாக பல விவசா யிகள் மிளகு சாகுபடிக்கு மாறினர். காரம் அதிகமுள்ள உயர்தரமான மிளகு இப்பகுதியில் உற்பத்தி செய்யப்படுவ தை அறிந்த தனியார் மசாலா நிறுவ னங்கள் நேரடியாக வந்து விவசாயிக ளிடமே கொள்முதல் செய்து வரு கின்றனர்.

சமவெளிப் பகுதிகளிலும் மிளகு விவசாயம் செய்யலாம் என்பதை தமிழ்நாடு முழுவதும் உள்ள விவசாயி களுக்கு தெரியப்படுத்தும் விதமாக கடந்த சில ஆண்டுகளாக ஆர்வமுள்ள விவசாயிகளை அழைத்து மிளகு தோட்டங்களிலேயே வைத்து விவசாயி களே பயிற்சியும், செயல்முறை விளக்க மும் கொடுத்து வருகின்றனர். அத னொரு பகுதியாக சேந்தன்குடி கிரா மத்தைச் சேர்ந்த விவசாயி செந்தமிழ் செல்வனின் மிளகுத் தோட்டத்தில் செவ் வாய்க்கிழமை நடைபெற்ற பயிற்சி முகா மில் பல்வேறு ஊர்களிலும் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். குறிப்பாக பெண் விவசாயிகள் அதிகமாக கலந்து கொண்டனர்.  முகாமில் மிளகு பயிரிடும் முறை, பராமரிப்பு குறித்தும், படர்ந்த கொடிகளில் இருந்து புதிய கன்றுகளை எடுப்பது குறித்தும் விவசாயி தமிழ்ச் செல்வன் விளக்கினார். தொடர்ந்து தோட்டத்தில் பல்வேறு மரங்களில் படர்ந்து காய்த்துள்ள மிளகு கொடி களை விவசாயிகளுக்கு சுட்டிக்காட்டி செயல் விளக்கம் அளித்தார்.  பயிற்சியில் கலந்து கொண்ட பலர் தங்கள் தோட்டங்களில் மிளகு சாகபடி செய்வோம் எனக் கூறியதோடு கன்றுக ளுக்கும் முன்பதிவு செய்தனர். கடந்த ஆண்டுகளில் பயிற்சி பெற்ற பல விவ சாயிகள் மிளகு சாகுபடியை சிறப்பாக செய்து வருவதாகவம் கூறினார்கள். அனுபவமிக்க விவசாயிகளே பயிற்சி யளித்தது சிறப்பாக இருந்ததாகவும் பயிற்சியில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.