திருச்சிராப்பள்ளி, ஜூன் 4-திருச்சி பெரிய கடைவீதி வெள்ளை வெற்றிலைக்காரதெருவில் உள்ள கோட்டை மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் இரண்டாம் வகுப்பு பயிலும் மாணவி சாய்னா(6), கராத்தே ஆசிரியரும் பல்வேறு சாதனைகளை புரிந்த டிராகன் ஜெட்லீ- சசிகலா தம்பதியினரின் மகளான இவர்,ஏற்கனவே நீண்ட நேரம் மெடிசின் பந்து மீது நின்று குளோபல் குழந்தைகள் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றவர். தற்போது ஒரு நிமிடத்தில் இடது கையை 130 முறைசுழற்றி புதிய சாதனையை நிகழ்த்தினார். இதற்கு முன்னதாக 8-ம் வகுப்பு பயிலும் மாணவி திவ்யபாரதி வலது கையை ஒரு நிமிடத்தில் 142 முறை சுழற்றியது சாதனையாக இருந்தது. தற்போது குழந்தைகள் பிரிவில் அரசுப் பள்ளி மாணவி சாய்னா நிகழ்த்திய இந்தசாதனை, எவரெஸ்ட் சாதனை புத்தகத்தில் அங்கீகரிக்கப் பட்டு சாதனைக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது. சாதனைபுரிந்த மாணவியை பள்ளி தலைமை ஆசிரியர் ரெக்னாபேகம், லயன்ஸ் கிளப் வேல்முருகன் மற்றும் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் பாராட்டினர்.