tamilnadu

வேலைவாய்ப்பு முகாம்

 திருச்சிராப்பள்ளி, நவ.6- திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் திருச்சி ரோட்டரி சங்கம் இணைந்து நடத்தும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நவம்பர் 9-ஆம் தேதி (சனிக்கிழமை) திருச்சி ஆர்.சி. மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் காலை 10 மணி முதல் நடைபெற உள்ளது. இவ்வேலைவாய்ப்பு முகாமில் 8-ம்  வகுப்பு, 10ம் வகுப்பு தேர்ச்சி, தோல்வி, பன்னிரெண்டாம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ, பட்டதாரிகள் வரை படித்த இளைஞர்கள் கலந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார்.