tamilnadu

img

மக்களிடம் பணம் வசூலிக்காமல் புதுவீடு கட்டித்தர வேண்டும்

சென்னை, ஜூன் 30 - குடிசைமாற்று வாரிய வீடுகளை முழு மானியத்தில், 400 சதுர அடி பரப்பில் கட்டித்தர வேண்டும் என்று வலியுறுத்தி ஞாயிறன்று (ஜூன் 30) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரச்சார இயக்கம் தொடங்கியது. மயிலாப்பூர் பகுதியில் உள்ள 26 குடிசைமாற்று வாரிய அடுக்குமாடி குடி யிருப்புகளை இடித்து விட்டு புதிதாக கட்டதிட்ட மிட்டுள்ளது. இதற்காக பயனாளிகளிடமிருந்து 5.50 லட்சம் வரை வசூலிக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கட்சி ஜூன் 30 முதல் ஜூலை 30 வரை கோரிக்கை பிரச்சார இயக்கம் நடத்துகிறது. இந்த பிரச்சார தொடக்க நிகழ்ச்சி விசாலாட்சி தோட்டம் குடிசைமாற்று வாரிய குடியிருப்பு பகுதி யில் தொடங்கியது. பிரச்சா ரத்தை கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் என். குணசேகரன் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், “வாரிய குடியிருப்பில் குடியிருக்கும் மக்களுக்கு அரசே தனது முழு செலவில் குடியிருப்பு களை கட்டிக் கொடுக்க வேண்டும். அரசிடம் பணம் இல்லை என்பது ஏமாற்று செயல்” என்று விமர்சித்தார். இதனைத் தொடர்ந்து தென்சென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ். குமார் தலைமையிலான குழு முத்தையா புரம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியிலும், பகுதிச் செயலாளர் ஐ.ஆர். ரவி தலைமையிலான குழு விசாலாட்சி தோட்டம் பகுதியிலும் பிரச்சாரத்தை மேற்கொண்டன. இந்த இயக்கத்தில் மாவட்டக் குழு உறுப்பினர் எம். சரஸ்வதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.