tamilnadu

மின்சாரம் தாக்கி ஊழியர் பலி

கும்பகோணம், ஜூன் 27-  கும்பகோணம் அருகே நாலூர் கிராமம் அய்யனார் கோவில் தெருவைச் சேர்ந்த சிங்காரவேல் மகன் மோகன் (47) என்பவர் செம்மங்குடி மின் வாரியத்தில் தற்காலிக பணி யாளராக கடந்த ஐந்து வருடங்களாக பணியாற்றி வந்தார்.  இந்நிலையில் கடந்த புதன் மாலை 5 மணியளவில் திருச்சேறை மெயின் ரோட்டில் உள்ள ஒரு வீட்டின் மின் பழுதை சரி செய்வதற்காக அருகில் இருந்த மின்கம்பத்தில் ஏறினார். அப்போது பழுதை சரி செய்கையில் மின்சாரம் தாக்கி பலியானார். இதைதொடர்ந்து பணியாளர் மோகன் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். குடும்பத் தில் ஒருவருக்கு அரசு வேலை வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை விடுத்து பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் கும்பகோணம்- திருவாரூர் மெயின் சாலையில் மறிய லில் ஈடுபட்டனர். இறந்து போன மோகனுக்கு, பத்தாம் வகுப்பு படித்து வரும் மாதவன் என்ற ஒரு மகனும், மனைவி யும் உள்ளனர்.