tamilnadu

img

சேதுபாவாசத்திரத்தில் தேர்தல் விழிப்புணர்வு படகுப் போட்டி

தஞ்சாவூர், ஏப்.5-தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் மீன்பிடித் துறைமுகத்தில் தேர்தல் விழிப்புணர்வு படகுப்போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. போட்டியை மாவட்ட வருவாய் அலுவலர் ந.சக்திவேல் தொடங்கி வைத்தார். உதவித் தேர்தல் அலுவலர் மற்றும் முத்திரைத்தாள் கட்டணதனித் துணை ஆட்சியர் அ.கமலக்கண்ணன், மீன்வளத் துறை உதவி இயக்குநர் சிவக்குமார், தேர்தல் சிறப்பு டிஎஸ்பி சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தார். வட்டாட்சியர் க.ஜெயலெட்சுமி வரவேற்றார். ஒன்பது படகுகள் கலந்து கொண்ட இப்போட்டியில் கழுமங்குடா சின்னராஜ் குழு முதலிடத்தையும், சேதுபாவாசத்திரம் கந்தசாமி குழு இரண்டாமிடம், சேதுபாவாசத்திரம் மனோகரன் குழு மூன்றாமிடத்தை பெற்றனர். வெற்றி பெற்ற அணிகளுக்கு ரொக்கப் பரிசு மற்றும் சுழற்கேடயம் வழங்கப்பட்டது. மற்ற அணிகளுக்கு ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குமரன், திருப்பதி, கலியபெருமாள், கண்ணன், ஆறுமுகம், தேர்தல்துணை வட்டாட்சியர் யுவராஜ், மண்டல துணை வட்டாட்சியர் சுந்தரமூர்த்தி, மீன்வளத்துறை ஆய்வாளர்கள் துரைராஜ், கெங்கேஷ்வரி, காவல் ஆய்வாளர் வீர.அண்ணாதுரை, தீயணைப்பு துறை அலுவலர் சி.கோவிந்தராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னாள் ஊராட்சி தலைவர் சமயமுத்து, மீனவர் சங்கத் தலைவர் ராஜமாணிக்கம், மீனவர் கூட்டுறவு சங்கத் தலைவர் மருதமுத்து,கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் போட்டிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

;