திருச்சிராப்பள்ளி, ஜூலை 24- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தா ளர் - கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் வரும் ஆகஸ்ட் மாதம் 23-ம் தேதி திருச்சியில் நடைபெறும் கல்வி உரிமை மாநாட்டிற்கு பல்லாயிரக்கணக்கா னோர் பங்கேற்கும் வகையில் திட்ட மிடப்பட்டுள்ளது. தமுஎகச திருச்சி மாவட்டக் குழுக் கூட்டம் திங்கள்கிழமையன்று திருச்சி யில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநி லத் துணைத் தலைவரும் மாவட்டத் தலைவருமான நந்தலாலா தலைமை வகித்தார். கூட்டத்தில் தேசிய கல்விக் கொள்கையை ஏன் திரும்பப்பெற வேண்டும் என்பது குறித்து மாநில செயற்குழு உறுப்பினர் நா.முத்துநில வன் பேசினார். கல்வி உரிமை மாநாட்டின் நிகழ்ச்சி நிரலை விளக்கி மாநில துணைப் பொதுச் செயலாளர் களப்பிரன் உரை யாற்றினார். அவர் பேசுகையில், இந்திய குடியரசு முன்னாள் துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி, திரைக்கலை ஞர் சூர்யா மற்றும் அகில இந்திய அள வில், மாநில அளவில் உள்ள கல்வி யாளர்கள், சமூகச் செயல்பாட்டா ளர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் பங்கேற்கும் மாநாடாக இது இருக்கும் என்றார். கூட்டத்தில் திருச்சி மாவட்டச் செய லாளர் ரெங்கராஜன், மாநிலக்குழு உறுப்பினர் இளங்குமரன், புதுக் கோட்டை மாவட்டத் தலைவர் ஸ்டாலின் சரவணன், செயலாளர் மதி யழகன், தஞ்சை மாவட்டச் செய லாளர் விஜயகுமார், பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் செல்வக்குமார் மற்றும் திருச்சி மாவட்டக்குழு உறுப்பி னர்கள் மாநாடு சிறப்பாக நடைபெறுவ தற்கான ஆலோசனைகளை வழங்கி னர். கல்வி உரிமை மாநாட்டை திருச்சி யில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் நடத்துவது எனவும், மாலையில் மாநாட்டின் முடிவுகளை விளக்கி வெஸ்ட்லி மைதானத்தில் மாபெரும் கலை இரவை நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது. மாநாட்டில் பல்லாயிரக்கணக்கான கலை எழுத்தா ளர்களை, கலைஞர்களை, ஆசிரி யர்களை, மாணவர்களை மற்றும் பொதுமக்களைப் பங்கேற்கச் செய் வது என தீர்மானிக்கப்பட்டது.