திருச்சிராப்பள்ளி, அக்18- கட்டட கட்டுமான தொழிலா ளர் சட்டம் 1996 மற்றும் 36 மாநில கட்டுமான தொழிலாளர் நலவாரி யத்தை சீர்குலைக்கும் மத்திய அரசின் நடவடிக்கையை தடுத்து நிறுத்த வலியுறுத்தி இந்திய கட்டுமான தொழிலாளர் சங்கம் சிஐடியு சார்பில் நாடாளுமன்ற சபாநாயகருக்கு கோரிக்கை மனு அளிக்கப்பட உள்ளது. அதனொரு பகுதியாக இந்திய கட்டுமான தொழிலாளர் சங்க திருச்சி மாநகர் மாவட்டக்குழு சார்பில் வெள்ளியன்று உறையூர் கீதாநகர் பகுதியில் கட்டுமான தொழிலாளர்களிடம் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. கையெ ழுத்து இயக்கத்திற்கு உறையூர் பகுதி பொறுப்பாளர் சக்திவேல் தலைமை வகித்தார். மாவட்ட செய லாளர் சந்திரசேகரன் உள்பட திர ளானோர் கலந்து கொண்டனர்.