பெரம்பலூர், ஜூன் 18- இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நெல்லை மாவட்ட பொருளாளர் அசோக் கொலையை கண்டித்து பெரம்பலூரில் அச்சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் செவ் வாய்க்கிழமை ஈடுபட்டனர். பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம், காந்தி சிலை எதிரே நடை பெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சங்க மாவட்டத் தலைவர் யு.பாலகுமார் தலைமை வகித்தார். மாவட்டச் செய லர் எல்.கே.அன்பரசன், பொருளா ளர் எஸ்.கே.சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலை வர் என்.செல்லதுரை, செயலர் எம்.கருணாநிதி ஆகியோர் கண்டன உரையாற்றினர். விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலர் பி.ரமேஷ், மாதர் சங்க மாவட்டத் துணைத் தலைவர் ஏ.கலையரசி, தமிழ்நாடு மின் ஊழி யர் மத்திய அமைப்பின் மாநில துணைத் தலைவர் எஸ்.அகஸ்டின், வாலிபர் சங்க முன்னாள் மாவட்டச் செயலர் எஸ்.பி.டி.ராஜாங்கம் உள்பட திரளானோர் பங்கேற்றனர். இதே போல் கட்சி கிளை சார்பில் நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலை யம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு நகரச் செயலாளர் எம்.பெரியசாமி தலைமை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர் ப. சுபாஷ்சந்திரபோஸ், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஏ.வி.சிங்கா ரவேலன் கண்டன உரையாற்றினர். தோழமைச் சங்க நிர்வாகிகள் சு.சிவ குமார், பி.ஜீவா, ஆ.நடராஜன், சு. மணி, எம்.வி.மகேந்திரன், ஆர்.ராம மூர்த்தி, ஆர்.நாகலட்சுமி, ஜி. ராஜேஸ்வரி, கா.காந்திநேசன், டி. தினேஷ்பிரபு, எஸ்.விஜயகுமார், கே.பக்கிரிசாமி, எஸ்.கணபதி கலந்து கொண்டனர்.