tamilnadu

img

பகுதி நேர மின் துப்புரவு பணியாளர்களை பணி நிரந்தரம் கோரி ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி, ஜூலை 19- சம்பளம் இல்லாமல் பணிபுரியும் பகுதி நேர துப்புரவு பணியாளர்களை பணி நிரந்த ரப்படுத்த வேண்டும். அனைத்து பிரிவு அலு வலகங்கள், துணை மின் நிலையங்களில் உள்ள துப்புரவு பணியாளர் காலி இடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு திருச்சி பெருநகர் வட்டம் சார்பில் வியாழனன்று தென்னூரில் உள்ள மின்வாரிய தலைமை பொறியாளர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு மின் ஊழி யர் மத்திய அமைப்பு மாநில துணைத்தலை வர் ரெங்கராஜன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி மாநில செயலா ளர் பன்னீர்செல்வம், வட்ட செயலாளர் செல்வ ராசு, டிஎன்பிஇஓ மாநில துணை பொதுச்செய லாளர் இருதயராஜ், லால்குடி கோட்ட செய லாளர் பழனியாண்டி, மணப்பாறை கோட்ட செயலாளர் ரியாஜூதீன், திருச்சி கிழக்கு கோட்ட செயலாளர் நாகராஜன், திருச்சி நகர கோட்ட செயலாளர் நடராஜன் ஆகியோர் பேசினர். ஜானகி, ரேவதி, லெட்சுமி, மணி மேகலை உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஜெயலெட்சுமி நன்றி கூறினார்.