tamilnadu

img

50 சதவீத மானியத்தில் மாட்டுத் தீவனம் வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி, ஜூன் 26- பால் உற்பத்தியாளர்களுக்கு 50 சதவீத மானி யத்தில் மாட்டு தீவனம் வழங்க வேண்டும். ஆரம்ப சங்கத்திற்கு வழங்க வேண்டிய பணபாக்கி, ஊக்க தொகையை உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு பால் உற்பத்தி யாளர் சங்கம் சார்பில் வியாழனன்று மணப்பாறை வட்டாட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு சங்க வட்டத் தலைவர் சீனிவாசன் தலைமை வகித்தார். சங்க மாவட்டத் தலைவர் கோபாலகிருஷ்ணன், வட்ட செயலாளர் ஜான்பிரிட்டே, விவசாய சங்க மாவட்ட செயலாளர் சிதம்பரம், சிபிஎம் வட்டச் செயலாளர் ராஜகோபால் ஆகியோர் பேசினார். யாகப்பன், முருகேசன், பிட்சைகண்ணு. பழனி யாண்டி,  சிபிஎம் வட்டகுழு உறுப்பினர்கள் ஷாஜகான், கண்ணன,  சு.சுரேஷ், தங்கராஜ் கலந்து கொண்டனர். இதே போல் தொட்டியம் வட்டாட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைத தலைவர் வரதராஜன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ராமநாதன், மாவட்ட தலைவர் கோபால கிருஷ்ணன், விதொச வட்ட செயலாளர் முருகன் பேசினர். முருகானந்தம், ஓமாந்தூரன், கோவிந்தசாமி, கந்தசாமி கலந்து கொண்டனர்.