திருச்சிராப்பள்ளி, ஜன.28- திருச்சி மாவட்டம் திரு வெறும்பூர் ஒன்றியத்தில் உள்ள பழுதடைந்த அர சங்குடி அரசு மருத்துவ மனையை கூடுதல் படுக்கை வசதியுடன் புதுப்பிக்க வேண்டும். மின்தடை காலத்தில் ஜெனரேட்டர் வசதி செய்து தரவேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அரசங்குடி கிளை சார்பில் செவ்வாய் அன்று அரசங்குடி அரசு மருத்துவமனை முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஊராட்சி துணைத்தலைவர் இளங்கோவன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி புறநகர் மாவட்ட செயலாளர் ஜெயசீலன், ஒன்றிய செயலாளர் நடரா ஜன், மாவட்டக்குழு உறுப்பி னர் பழனிச்சாமி, வட்டக்குழு உறுப்பினர்கள் சங்கிலி முத்து, முருகேசன், கணே சன், மாணிகவாசகம் பேசி னர். சகுந்தலா, மகேந்திரன், மாரி, ஆரோக்கியசாமி, அன் பழகன், ராஜகோபால், முரு கையன், தமிழ்செல்வன், கமலா, நாகேஸ்வரி, ராஜேந்திரன் உள்பட ஏராள மானோர் கலந்து கொண்ட னர். அரசங்குடி வேலவன் நன்றி கூறினார்.