tamilnadu

img

தொடர் மழையால் பாதிப்பு வீடு இடிந்து விழுந்து முதியவர் பலி சாலையின் குறுக்கே சாய்ந்த மின்கம்பம்

கும்பகோணம், நவ.30- தஞ்சை மாவட்டம் பாபநாசம் வட்டம் மெலட்டூர் மூன்றாம் சேத்தி கிராமம்,  கரம்பை தெற்கு தெருவை சேர்ந்த துரை கண்ணு (வயது 70) என்பவர் தனது மகன் காமராஜ் என்பவரிடம் மனஸ்தாபம் கார ணமாக அதே மெலட்டூர் மூன்றாம் சேத்தி  கரம்பை கிராமத்தில் சாலைத் தெருவில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வெள்ளியன்று இரவு பெய்த மழை காரணமாக வீட்டினுள் படுத்திருந்த துரைகண்ணு மீது சுவர் இடிந்து விழுந்தது. அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் வந்து பார்த்த பொழுது துரைகண்ணு சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். இவர் விவசாய கூலி வேலை செய்து வந்துள்ளார். தகவல றிந்து கும்பகோணம் கோட்டாட்சியர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் துரைக்கண்ணு இறப்பு குறித்து விசாரணை செய்தனர். மேலும் பசுபதிகோயில் பட்டித் தோப்பு கீழவெட்டியிலிருந்து புது மாத்தூர் சாலையில் 2-வது மின்கம்பம் கடந்த 2 ஆண்டு காலமாக சாலையின் குறுக்காக சாய்ந்த நிலையில் மின்சார சப்ளை இருந்து வந்தது. இது குறித்து அய்யம்பேட்டை மின்வாரிய அலுவ லர்களுக்கு பல தடவை பொதுமக்கள் தகவல் தெரிவிக்கப்பட்டதாக கூறப் படுகிறது. ஆனால் எந்த நடவடிக்கை யும் இல்லை.  இந்நிலையில் தொடர் கனமழை காரணமாக சனிக்கிழமை  காலை அந்த மின்கம்பம் அடியோடு சாலையின் குறுக்காக சாய்ந்து விழுந்தது. அப் போது பொதுமக்களோ, பள்ளிக் குழந் தைகளோ யாரும் அவ்வழியே செல்ல வில்லை. இதனால் விபத்து தவிர்க்கப் பட்டது. மின் வாரிய அலுவலர்கள் மெத்த னமாக  உள்ளதாக பொதுமக்கள் புகார் கூறினர்.