தஞ்சாவூர், மார்ச் 20- தஞ்சாவூர் அருகே விளார் ஊராட்சியில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலமாக முகக் கவசம் தயாரிக்கும் பணியினை ஆட்சியர் ம.கோவிந்த ராவ் வியாழ னன்று ஆய்வு செய்தார். அப்போது அவர் தெரிவித்த தாவது:- மாவட்டத்தில் 14 வட்டா ரங்களில் 23 இடங்களில் மொத்தம் 150 தையல் இயந்திரங்களைக் கொண்டு மாஸ்க் தயாரிக்கும் பணி நடைபெறுகிறது. நாளொன்றுக்கு 10 ஆயிரத்திலிருந்து 15,000 மாஸ்க் தயாரிக்கும் பணி நடைபெற்று வரு கிறது. இங்குத் தயாரிக்கப்படும் மாஸ்க் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும். அதன் தொடர்ச்சியாகப் பொது மக்களுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் தங்கள் அத்தியாவசியத் தேவையைத் தவி ர்த்துப் பொது இடங்களில் பயன் படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். பொது நிகழ்ச்சிகள், கூட்டங்கள், உணவகங்கள், உடற்பயிற்சி கூடம் ஆகியவற்றைத் தவிர்ப்பது நல்லது. வெளியிடங்களில் செல்லும்பொ ழுது முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும். நாளொன்றுக்கு 10 முதல் 15 முறை தங்கள் கைகளைக் கழுவ வேண்டும். மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும் பணிகளுக்குப் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என்றார்.