கும்பகோணம், நவ.10 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சாவூர் மாவட் டம் திருவிடைமருதூர் தெற்கு ஒன்றிய 24 ஆவது மாநாடு திருவிடைமருதூரில் நடைபெற்றது. மாநாட்டிற்கு ரங்கசாமி, பவானி, கண்ணன் ஆகி யோர் தலைமை வகித்தனர். முன்னதாக மூத்த தோழர் தருமையன் செங்கொடியை ஏற்றினார். ஒன்றியக் குழு உறுப்பினர் வீரக் குமார், வரவேற்றார். மாநாட்டை மாவட்ட செயற்குழு உறுப்பினர் என். சுரேஷ்குமார் துவக்கி வைத்து பேசினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.கலைச்செல்வி வாழ்த்திப் பேசினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி. ஜெயபால் நிறைவுரை ஆற்றி னார். கட்சியின் திருவிடைமரு தூர் தெற்கு ஒன்றியக் குழு செயலாளராக டி.வீரக்குமார் உட்பட 11 பேர் கொண்ட ஒன்றியக் குழு தேர்வு செய்யப்பட்டது. நாச்சியார்கோவில் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும். நாச்சி யார்கோயிலை மையமாக வைத்து தீயணைப்பு நிலை யம் வேளாண்மை ஒழுங்கு முறை கூடம் அமைக்க வேண்டும். புவிசார் குறியீடு பெற்ற பிரசித்தி பெற்ற நாச்சி யார்கோயில் குத்து விளக்கு தொழிலை பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.