மண்ணச்சநல்லூர், ஜூலை 6- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் சிறப்பு பேரவை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மண்ணச்சநல்லூர் மேற்கு ஒன்றிய செயலாளர் எம்.ஜி.ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். கட்சியின் வட்டக்குழு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.சிவராஜ், ஜெ.சுப்ரமணியன் மற்றும் மாவட்டக்குழு உறுப்பினர் பூமாலை ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். கட்சியின் பல்வேறு கிளை உறுப்பினர்களுக்கு கே.சிவராஜ், உறுப்பினர் அட்டைகளை வழங்கினார். முன்னதாக திருநெல்வேலியில் படுகொலை செய்யப்பட்ட தோழர் அசோக்கிற்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. வட்டக்குழு உறுப்பினர் வி.மனோகரன் நன்றி கூறினார்.