முசிறி, ஜூன் 20- வாலிபர் சங்க நெல்லை மாவட்ட பொருளாளர் அசோக் படுகொலைக்கு நீதிக் கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் திருச்சி மாவட்டம் முசிறி கைகாட்டியில் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வாலிபர் சங்க மாவட்டக் குழு ராமச்சந்திரன் தலைமை வகித்தார். கட்சியின் ராஜா, நல்லுசாமி, கிருஷ்ணன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். வாலிபர் சங்க சுப்ரமணி, கதிர்வேல், பாபு, தமிழ் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.