tamilnadu

img

திருவெறும்பூரில் சிபிஎம் நிதியளிப்பு பொதுக்கூட்டம் கே. பாலகிருஷ்ணனிடம் ரூ.4 லட்சம் வழங்கல்

திருச்சிராப்பள்ளி, பிப்.22- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசி யல் விளக்க மற்றும் கட்சி நிதியளிப்பு பொது க்கூட்டம் திருச்சி மாநகர் மாவட்டக்குழு சார்பில் புதனன்று திருவெறும்பூரில் நடை பெற்றது. கூட்டத்திற்கு காட்டூர் பகுதி செயலாளர் மணிமாறன் தலைமை வகித்தார். காட்டூர் பகுதிக்குழு உறுப்பினர் சுலைமான் வரவேற்றார். மத்திய கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினர் எஸ்.ஸ்ரீதர், மாநகர் மாவட்டச் செயலாளர் ராஜா, மாவட்ட செயற்குழு உறு ப்பினர்கள் கே.சி.பாண்டியன், ரெங்கராஜன். சம்பத், ரேணுகா, வெற்றிச்செல்வன், ஜெய பால், லெனின், திருவெறும்பூர் இடைக்கமிட்டி  செயலாளர் நடராஜன் ஆகியோர் பேசினர். கூட்டத்தில், கட்சி வளர்ச்சி ரூ. 4,04,600 நிதியை நிதி பொறுப்பாளர் ரெங்கராஜன், கட்சி யின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ண னிடம் வழங்கினார்.   கூட்டத்தில் இடைக்கமிட்டி செயலா ளர்கள் கார்த்திகேயன், வேலுச்சாமி, சிவக்கு மார், வேளாங்கண்ணி, சங்கர், ரபீக் அஹமது,  சந்திரபிரகாஷ், இளையராஜா, மாவட்ட க்குழு உறுப்பினர்கள் அன்வா்உசேன், சுப்ர மணியன், சின்னசாமி, ராமர், சரஸ்வதி, ரங்க ராஜன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக புதுச்சேரி சப்த ர்ஹஷ்மி கலைக்குழுவின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. பகுதிக்குழு உறுப்பினர் கனல்  கண்ணன் நன்றி கூறினார்.

;