tamilnadu

img

புதுக்குடி முதல் பால்பண்ணை வரை எச்சரிக்கை மின் விளக்கு வைத்திடுக!

திருச்சிராப்பள்ளி, ஜூலை 3-    திருச்சி–தஞ்சை தேசிய நெடுஞ் சாலையில் தினந்தோறும் நடை பெறும் விபத்தால் ஏற்படும் உயிர்ப்பலி யை தடுக்க புதுக்குடி முதல் பழைய பால்பண்ணை வரை சுமார் 20 இடங்க ளில் சென்டர் மீடியன் ஓப்பனில் விபத்து எச்சரிக்கை மின் விளக்கு, எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும். பேரிகார்டு வைக்க வேண்டும். மக்கள் அதிகம் பயன்படுத்தும் இடங்களில் காலை, மாலை வேளைகளில் போக்குவரத்து காவலர்களை பணியமர்த்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கை களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் துவாக்குடி மற்றும் கிழக்கு பகுதி கிளைகள் சார்பில் செவ்வாயன்று கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிளைச் செயலாளர் மணி தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி திருவெறும்பூர் இடைகமிட்டி செயலா ளர் நடராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் மல்லிகா, மாவட்டக்குழு உறுப்பினர் பழனிச்சாமி ஆகியோர் பேசினர். ஒன்றியக்குழு உறுப்பி னர்கள் பலர் கலந்து கொண்டனர். துவாக்குடி கிளை செயலாளர் மகா லிங்கம் நன்றி கூறினார்.

;