தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் வட்ட வழங்கல் அலுவலகம் சார்பாக வெள்ளியன்று நுகர்வோர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தென்னமநாடு தர்மாம்பாள் ராமசாமி கல்லூரி மாணவர்களை கலந்து கொண்ட பேரணியை, மாவட்ட வழங்கல் அலுவலர் இரா.ஜெயபாரதி தொடங்கி வைத்தார். பேரணியில் வட்டாட்சியர் அருள்ராஜ், வட்ட வழங்கல் அலுவலர் சுமதி, தர்மாம்பாள் ராமசாமி கல்லூரி முதல்வர் லதா, முதுநிலை வருவாய் ஆய்வாளர் பிரபாகரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.