அறந்தாங்கி, ஜூலை 14- புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவிலை அடுத்த பெருநாவலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2019-2020-ம் கல்வியாண்டில் பட்ட மேற்படிப்பில் சேருவதற்கான விண்ணப்பங்கள் 8.6.2019 முதல் வழங்கப்படுகின்றன. ரூ 60 செலுத்தி கல்லூரி அலுவலகத்தில் பெற்று கொள்ளலாம். எஸ்சி, எஸ்டி, மாணவ-மாணவிகளுக்கு விண்ணப்பங்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களுடன் உரிய சான்றிதழ்கள் இணைக்கப் பெற்று கல்லூரி அலுவலகத்தில் 19.7.2019 மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் எம்.ஏ.ஆங்கிலம், எம்.காம்., எம்.எஸ்.சி. கணினி அறிவியல் ஆகிய மூன்று பாடப் பிரிவுகளுக்கும் 29.7.2019 (திங்கள்) காலை 10.30 மணிக்கு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடைபெற உள்ளது. விண்ணப்பித்த மாணவ - மாணவிகள் உரிய சான்றிதழ்களுடன் குறித்த நேரத்தில் பெற்றோர்களுடன் கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டும் என கல்லூரி முதல்வர் முனைவர் ஜெ.சுகந்தி அறிவித்திருக்கிறார்.